Tuesday, January 21, 2014

கூகிளில் ஒரு எண்ட்ரி

Jackie Chiles @Rasanai

19th January 2014 from TwitLonger

கூகிளில் வேலை பார்ப்பது பல கணிப்பொறியாளர்களுக்கு கனவு. அப்படி கனவாய் இல்லாத எம்போன்றோர் டெக்னாலஜியில் இருந்து விலகிய “சீச்சீ, இந்த பழம் புளிக்கும்” டேமேஜர்கள். ’நான் கடவுள்’ வில்லன் போல் வெறும் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் செய்து உருப்படிகளை மேய்த்து உருப்படாமல் போன கேஸ்கள். Glassdoor, Forbes முதல் வாராந்தரி ராணி வரை அனைத்து Best Places to work லிஸ்ட்டிலும் வரும் கூகிளில் இருக்கும் பே ஏரியா நண்பனிடம் “ஏண்டா, ஆண்ட்ராய்ட் ப்ராஜக்ட்ல இருந்தா ட்ராயர் மொதக்கொண்டு லாண்ட்ரி செஞ்சு தர்றாங்களாமே, திங்க சாப்பாடு, தூங்க ஸ்லீப்ப்பாடு (Sleep Pod) எல்லாம் ஃப்ரீ ஃப்ரீயாமே” என பெருமூச்சு விடுவதோடு ஜோலி முடிகிறது.

நிற்க, அப்படி கூகிளில் ஒரு எண்ட்ரி கிடைத்து, ’அடடே, இது தான் சிம்பனி ஆர்கெஸ்ட்ராவா?’ன்னு ஆவென ஆச்சர்யப்பட்டு, தட்டுத்தடுமாறி செட்டிலாவதை ஒரு திரைப்படமாக்கினால்? கேட்கவே சுவாரசியமாக இல்லை? அது தான் The Internship திரைப்படம். http://www.imdb.com/title/tt2234155/

கிட்டத்தட்ட நாப்பது வயதில், வாயால் வடை சுட்டு சேல்ஸ் தொழிலில் இருக்கும் 2 நண்பர்களுக்கு வேலை போய்விடுகிறது. எப்படியோ அதே வாயால் வடை சுட்டு கூகிளில் ஒரு இண்டர்ன்ஷிப், அதான் அப்பரசண்டியாகிவிடுகிறார்கள். கூகிள் கேம்பசில் சுகுர்ரான மத்த 20 வயது காலேஜ் பொடிசுகள் இவர்களை ‘யார்றா நீங்க’ எனப்பார்க்க, அவர்களோடு இந்த இரண்டு மாமாக்களும் ஜமா சேர்கிறார்கள். கூகிள்காரன், ஐந்தைந்து பேர் கொண்ட குழுக்களாக செட்டு சேர்ந்து பல ப்ராஜக்ட்ஸ் செய்யனும், முதலில் வரும் ஷேவிங் செட்டுக்கு தான் வேலைங்கிறான். யாருமே சேர்த்துக்கொள்ளாத இவர்களும், இன்னும் 3 பேரும் கட்டாயத்தால் குழுவாக்கப்படுகிறார்கள். கூகிளில் ஆஃபர் வாங்குகிறார்களா, ’ஆப்’பர் வாங்குகிறார்களா என்பதை டாரண்ட் திரையில் காண்க. (கவலை வேண்டாம், ஸ்பாய்லர்கள் ஏதும் சொல்லவில்லை, ஏனென்றால் படத்தில் ஸ்பாய்லர்களே இல்லை!)

கதை கனத்திலோ இல்லை பர்ஸ் கனத்திலோ வெயிட்டான பல ஆங்கிலப் படங்கள் உண்டு. அவை தான் பொதுவாய் உலகளவில் போனியாகின்றன, ஆஸ்கருக்கு தீனியாகின்றன. ஆனால், நிஜ சமகால அமெரிக்கா இதுபோன்ற சாதுவான காமெடிகள்,ரொமாண்டிக் காமெடிகள் மூலமாகத்தான் (ஓரளவுக்கு) வெளிப்படுகிறது என்பதென் துணிபு. இந்த ’ழான்றா’ (genre) படங்களின் பெருரசிகன் நான். இதற்கென்றே ஒரு செட்டு நடிகர்கள் உண்டு ஹாலிவுட்டில். நம் ஜெயம்ரவி,ஜீவா போல் முதல்வரிசைக்கு பின்வரிசையில் நின்றுகொண்டு வதவதவென ரெகுலர் இண்டர்வலில் படங்கள் விட்டுக்கொண்டேயிருப்பார்கள். வின்ஸ் வான் (Vince Vaughn), ஓவன் வில்சன் (Owen Wilson) இந்த கேட்டகரி நடிகர்கள். இவர்கள் அவதாரிலோ, அவெஞ்சர்சிலோ, அஃப்கானிஸ்தானிலோ அமெரிக்காவை (எத்தனை அ?) காப்பாற்றும் ஸ்க்ரிப்டில் நடிப்பதில்லை. இவர்களது காம்பினேஷனில் Wedding Crashers செம கல்லா. ’சின்னதம்பி பெரியதம்பி’ பிரபு,சத்யராஜ் போல் ஒரு இயல்பான கலாமாஸ்டர் மேட்டர் இவர்களுக்குள் உண்டு , அது இப்படத்திலும் நன்கு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

இப்படத்தில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், சப்போர்டிங் காஸ்ட். குறிப்பாய் படத்தில் காண்பிக்கப்படும் இரு இந்தியர்கள். ஒருவர் இந்த அப்பரசண்டிகளை வடிவேலு போல் கரித்துக்கொட்டிக்கொண்டே இருக்கும் கூகிள் மேனேஜர் Mr.செட்டி. உழைத்து கூகிளில் முன்னேறிய ஒரு இந்திய மேலாளர் இப்படித்தான் இருப்பான். இந்தியர்களுக்கான டிபிக்கல் ஹாலிவுட் ஸ்ட்ரீயோடைப்பிங் இல்லாது, ஒரு தவிர்க்கமுடியாத thick accentஓடு, ஒரு boring பெர்சனாலிட்டியாக கச்சிதம். போலவே, நேஹா பட்டேல் என இவர்கள் செட்டில் உள்ள ஒரு இளம்பெண். என் மகள் 16 வயதில் இப்படித்தான் இருப்பாள் என தோன்றியது. போக, ஒரு முசுடு வெள்ளக்கார பய, ஒரு மரபார்ந்த சைனீஸ் பையன், ஒரு அக்ரெசிவ் ப்ரிட்டிஷ் பையன் என சாம்பிளுக்கொன்றாய் இன்றைய தலைமுறை. ஒரே சீனில் வந்தாலும் வில் ஃபெரல் பட்டாசு.

படத்தில் கதை, பெரிய திருப்பம், ஏமாற்றங்கள், வில்லன் ஏதுமில்லை. முடிவும் யூகித்திருப்பீர்கள். வில்லனாக சித்தரிக்கப்படும் அந்த ஒரு விஷயம் எனக்கு மிகச்சரியாக ஒத்துப்போகும் ஒரு விஷயம். அடிப்படையில் டீம் ஒர்க், சம்பந்தமேயில்லாத 5 பேர் எவ்வாறு அவரவர் கூடை விட்டு வெளியே வந்து நட்பாகி வெல்கிறார்கள் எனச்சொல்கிறது படம். படம் முழுதும் கூகிள் காம்பசில். ‘சொக்கா எனக்கில்லை’ என அங்கலாய்க்கும் அளவுக்கு சம்மரில் ஜொலிஜொலிக்கிறது கூகிள் ஆபிஸ். ஆமா, இவ்வளவு திருவிழா கூட்டமாவா இருக்கும் கூகிள்?

குறைகள்? நிறைய உண்டு. IMDBயில் பெரிய ரேட்டிங் இல்லை, கூகிளுக்கான ப்ராண்ட் ப்ளேஸ்மெண்ட் என வண்டி வண்டியாக கமெண்டுகள். கொஞ்சம் தட்டிகிட்டி நீட்டி முழக்கினால், ஹிந்தியில் அருமையாக செய்யலாம். ஒரு குளிர்ந்த வாரயிறுதி மாலையில், மனைவி அனுமதித்த ஒரு பியருடன், பக்கோடாவை கொறித்துக்கொண்டே பார்க்க, சிரிக்க ஏதுவான,சாதுவான படம். நான் அப்படி தான் பார்த்தேன், ஹிஹி.

பார்த்தேயாகவேண்டிய படமில்லை. ஆனா பார்த்துத்தான் பாருங்களேன்.

படத்தின் ட்ரைலர்
http://www.youtube.com/watch?v=a8DjuGlVknQ

(இப்பதிவை இங்கும் படிக்கலாம்
https://www.facebook.com/rasanaikkaaran/posts/1415275495381152 )

கரும்புனல் நாவல்

amas32

Sushima Shekar @amas32


படித்து முடித்தக் கையோடு புத்தக ஆய்வை எழுதத் தூண்டியுள்ளது @penathal சுரேஷ் alias ராம் சுரேஷ் எழுதியிருக்கும் கரும்புனல் நாவல். எடுத்தப் புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றாத அளவு சுவாரசியமானக் கதை.மிக மிக மாறுபட்டக் கதைக் களம். அதுவே கதையின் பலம். நகைச்சுவை இழையோடும் எழுத்து நடை படிக்கத் தூண்டும் அடுத்தக் காரணி. உரையாடல்கள் மூலம் கதைச் சொல்லும் இவரின் பாணி மிகவும் சுவாரசியமற்ற சரித்திர பூகோள விஷயங்களையும் படிப்பவர்கள் புரிந்து கொண்டு ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.

பீகார் நிலக்கரிச் சுரங்கம், பீகாரின் சாதி வெறி,பொருளாதாரத்தில் பின் தங்கிய உழைக்கும் வர்க்கம், ஆளுநர்களின் அசுர பலம், தொழிலாளர் நலனில் அக்கறை இல்லாத தொழிற் சங்கத் தலைவர்,மலிந்து கிடக்கும் ஊழல், தலைமை சரியில்லாததால் சிதைந்து போகும் சமுதாயம் என இந்தக் கதையை நல்ல ஒரு திரைப்படமாக எடுக்கக் கூடிய அளவு துரோகமும், காதலும், சூழ்ச்சியும், சஸ்பென்சும் நிறைந்ததாக உள்ளது. எந்தக் கதையும் நம் அனுபவத்தோடு சொல்லப்படும்போது நம்பகத் தன்மை அதிகமாகிறது. அதனாலேயே இந்தக் கதை அன்னியமாகத் தோன்றாமல் நமக்கே நடப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் எந்த ஒரு சமுதாயத்திலும் நாம் காணும் மனிதர்களைக் கொண்டதாக உள்ளது.

இது இவரின் முதல் நாவலா என்று தெரியாது. ஆனால் மிகவும் சிறப்பாக எழுதி பண்பட்ட எழுத்தாளர் நிலையில் நிற்கிறார். இன்னும் நிறைய புத்தகங்கள் எழுதி வெளியிட்டு அவர் புகழ் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் :-)

Monday, January 20, 2014

பெரியார் ரசிகன்

நீங்கள் நாத்திகரோ ஆத்திகரோ பிரச்சினையில்லை. தமிழர் என்றால் உங்களுக்கு பெரியார் தவிர்க்க முடியாதவர். நாத்திகர்கள் பலரும் பெரியாரை கடவுளாக்கி வழிபட ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், ஆத்திகர்கள் பெரியாரின் தாக்கத்தால் அடையாளச் சிக்கல் அவஸ்தையில் அலைக்கழிக்கப் படுகிறார்கள்.

இந்த சுவாரஸ்யமான முரணை களமாக்கி நாவல் ஆக்கியிருக்கிறார் குகன்.

எம்.ஜி.ஆர் ரசிகன், சிவாஜி ரசிகன், ரஜினி ரசிகன், கமல் ரசிகன், விஜய் ரசிகன், அஜீத் ரசிகன் என்று கேள்விப்பட்டிருப்போம். இந்நாவல் பெரியார் ரசிகனைப் பற்றியது. பெரியாருக்கு தொண்டர்தான் உண்டு. ரசிகன் இருக்க முடியுமா என்று கேட்டால் ஏன் இருக்கக்கூடாது என்கிற கேள்வியை எழுப்பி, சுவாரஸ்யமான சமகால வரலாற்றை புனைவில் முயன்றிருக்கிறார் குகன்.

இளம் தலைமுறை எழுத்தாளர்களின் இம்மாதிரியான துணிச்சலான முயற்சிகள்தான் எதிர்கால தமிழ் இலக்கியத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. எழுத்துப்பிழை, எடிட்டிங் பிரச்சினைகள் உள்ளிட்ட சில குறைகளை களைந்துப் பார்த்தால் ‘பெரியார் ரசிகன்’ குறிப்பிடத்தக்க சமீபத்திய நாவல்களில் ஒன்று.

விலை ரூ. 100/- பக்கங்கள் : 160

வெளியீடு : உதயகண்ணன், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11. தொலைபேசி 044-25582552, மின்னஞ்சல் : bookudaya@rediffmail.com

சென்னை புத்தகக் காட்சியிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Thursday, January 16, 2014

தமிழ்க்கவி

புலிகளின் குரல் வானொலியில் பணிபுரிந்தவர். பாடகி, கேமிரா விமன், எடிட்டர், தயாரிப்பாளர், எழுத்தாளர். ஊடகத்தின் அத்தனை துறைகளிலும் அனுபவம் வாய்ந்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் மூன்று மொழிகளையுமே சரளமாகப் பேசக்கூடியவர்.

ஈழத்தின் கடைசிக்கட்ட போர் அனுபவங்களை நாவலாக எழுதியிருக்கிறார். ‘ஊழிக்காலம்’, தமிழினி வெளியீடாக வெளிவந்திருக்கிறது. போரின் வலி நேரடி சாட்சியமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நாவலை எழுத எவருக்குமில்லாத தகுதி அன்னை தமிழ்க்கவிக்கு உண்டு. ஏனெனில் தன்னுடைய இரண்டு மகன்களை போரின் பசிக்கு உணவாக கொடுத்த அவலமான அனுபவம் அவருக்கு இருக்கிறது.

போரிலக்கியம் என்கிற வகையில் வகைப்படுத்தக்கூடிய இந்நாவல், தமிழின் மிக முக்கியமான ஆக்கங்களில் ஒன்றாக நிச்சயம் இடம்பெறப் போகிறது என்று நம்புகிறேன்.

வாழ்ந்தால்தான் புரியும்

மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்!



பொங்கல், தீபாவளினு பண்டிகை வந்துட்டா, பொண்டாட்டி, புள்ளகுட்டிங்களுக்குப் புதுத்துணி, பலகாரம், பட்டாசுனு வாங்கிக் கொடுத்துட்டு, தனக்குப் புதுசா ரெண்டு ஜட்டி மட்டும் வாங்கிக்கிட்டு, நடு ஹால்ல பாயை விரிச்சுப் படுத்துக்கிட்டு, வர்ற போனுக்கெல்லாம் 'ஹேப்பி பொங்கல், ஹேப்பி மாட்டுப் பொங்கல், ஹேப்பி சக்கரைப் பொங்கல்’னு வாய் நிறைய வாழ்த்து சொல்ற ஆயிரக்கணக்கான அப்பாவி மிடில் கிளாஸ் மாதவன்களின் கண்ணீர்தான் இது...

பிஞ்சுபோன செருப்பையே ஃபெவிகால் ஒட்டி பல வருஷம் பயன்படுத்துற பரதேசிங்கய்யா நாங்க. மூணு நாளா யோசிச்சு, சரி 300 ரூபாய்க்குள்ள புதுச் செருப்பு ஒண்ணு வாங்கலாம்னு வந்தா, 'இந்தச் செருப்பை தார் ரோட்டுல போடலாம்... இந்தச் செருப்பைத் தண்ணில போடலாம்’னு 2000 ரூபாய் 3000 ரூபாய் செருப்புகளை எல்லாம் எடுத்துக்காட்டி அவமானப்படுத்துறீங்களே! தண்ணில போட்டு குழம்பு வெக்க நாங்க என்ன பருப்பா வாங்க வந்தோம்? தரையில போட்டு நடக்க செருப்பு தானே வாங்க வந்தோம்!

சாம்பார்ல தண்ணி ஊத்திப் பார்த்திருப்பீங்க, சால்னாவுல தண்ணி ஊத்திப் பார்த்திருப்பீங்க, சரக்குல தண்ணி ஊத்திப் பார்த்திருப்பீங்க... ஆனா, தீர்ந்துபோன ஷாம்பூ பாட்டில்ல தண்ணியை ஊத்தி யூஸ் பண்றதைப் பார்த்திருக்கீங்களா? அதைக் குலுக்கிக் குலுக்கி, ஒரு மாசத்துக்கு ஊரே குளிப்போம்யா!

அரை மூட்டை அரிசியும், ஒரு லிட்டர் நல்லெண்ணையும் வாங்கவே சொங்கிப்போயிக் கிடக்கிற வெங்கப்பய நாங்க. இதுல, அட்சயத் திரியைக்கு நகை வாங்கு, ஆடித் தள்ளுபடிக்கு நெக்லஸ் வாங்குனு, 'சின்னத்தம்பி’ பிரபு ஆரம்பிச்சு 'பெரியதம்பி’ சத்யராஜ் வரை, கேரக்டர் ஆர்டிஸ்ட் அங்கிள்களை வீட்டுக்கு அனுப்பி ஆசையைக் கிளறுறீங்களே... எங்க உடம்புல இருக்கிற ஏதாவது அங்கத்தை அடகு வைச்சாத்தான், தங்கம் வாங்க முடியும்னு உங்களுக்குத் தெரியாதுல்ல?

100 ரூபா கொடுத்துட்டோம்கிற ஒரே காரணத்துக்காக 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தையே சிரிச்சுச் சிரிச்சுப் பார்த்தவங்கய்யா நாங்க. 50 ரூபா கொடுத்துட்டோம்கிற காரணத்துக்காக 'அன்னக்கொடி’ல மனோஜ் பண்ண அட்டூழியத்தை வெறிச்சு வெறிச்சுப் பார்த்தவய்ங்களும் நாங்கதான். எங்ககிட்ட போய் ஆயிரம் ஆயிரமா வருமான வரியைப் பிடிச்சு ஈரக்கொலையை உருவுறீங்களே... இது நியாயமாரேரேரே..!

மாசத்துல மொத வாரம் ஹோட்டல்ல இட்லிக்கு சட்னியையும் சாம்பாரையும் தொட்டுக்கிட்டுச் சாப்பிடுற நாங்க, மாசக்கடைசில சட்னிக்கும் சாம்பாருக்கும் இட்லியைத் தொட்டுக்கிட்டுத் தின்னா, ஏதோ அவங்க மச்சினி கையைப் புடிச்சு இழுத்த மாதிரி முறைக்கிறீங்களே ஹோட்டல்கார்... ஹோட்டல்ல டிபன் பார்சல் வாங்கினா, குருமா பாக்கெட் தருவாங்க. ஆனா, அஞ்சு ரூவாவுக்கு வெறும் குருமா பாக்கெட் மட்டும் பார்சல் வாங்குறதைக் கண்டுப்பிடிச்ச கஞ்சப் பரம்பரைங்கப்பா நாங்க!

ஏ அரசாங்கமே... பெட்ரோல் விலையை எவ்வளவு வேணா ஏத்திக்க, நான் 100 ரூபாய்க்குத்தான் வண்டிக்கு பெட்ரோல் ஊத்துவேன். ஏ ஏகாதிபத்தியமே... குவாட்டர்ல ஆயிரம் பிராண்ட் கொண்டு வா. ஆனா, நான் 65 ரூபா குவாட்டர்தான் ஊத்திக்குவேன்னு கடமையாத்துற கன் பார்ட்டி நாங்க. டாஸ்மாக் உண்டியல்ல காசைப் போட்டு கவர்மென்ட் கஜானாவுக்கு ரீசார்ஜ் செஞ்சுட்டு, சிவனேனு போறவனைக் கூப்பிட்டு வாயை ஊது, வயித்தை ஊதுனு டார்ச்சர் பண்றீங்களே, 65 ரூபா குவாட்டர்ல அத்தர் வாசனையா வரும்... ஆல்கஹால் வாசனைதான் வரும்!

வெள்ளைக்காரன் ஒபேரா, கூகுள் குரோம்னு இன்டர்நெட் பிரவுசர் பிரவுசராக் கண்டுப்பிடிக்கிறப்ப, துணிக்கடையில் வாங்குற நாலே நாலு டவுசருக்கும் தனித்தனியா பில் போட்டா, ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு கட்டைப் பை வாங்கலாம்னு கண்டுபிடிச்சது யாரு... பூரா நம்ம மிடில் கிளாஸ்காரப் பயலுவதான்!

'கால் கிலோ கறி கொடுங்க’னு கேட்டா, ஏதோ கல்லாப்பெட்டி சாவியைக் கொடுங்கனு கேட்ட மாதிரி கோவிச்சுக்கிறாங்க. 'அட எனக்கு கொலஸ்ட்ரால்பா... வீட்டு நாய்க்கு வாங்கிட்டுப் போறேன்’னு சால்ஜாப்பு சொன்னா, 'அப்போ வெறும் எலும்பாப் போடட்டுமா சார்’னு நாக்குல நரம்பில்லாம நக்கல் அடிக்கிறாங்க. அந்தக் கால் கிலோ கறியில குழம்பு வெச்சு, சட்டிக்குள்ள கரண்டியை விட்டு கறி கிடைக்குமானு வரட்டு வரட்டுனு தேடிப் பார்க்கிற வலி உங்களுக்கு என்னைக்குமே புரியாது ப்ரோ!

ஒரு நாள் ஒரு வேளை உப்புமா சாப்பிட்டா தப்பா? வாரத்துல ஒரு நாள் ஒரு வேளை உப்புமா சாப்பிட்டா தப்பா? வருஷம் முழுக்க ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாள் ஒரு வேளை உப்புமா சாப்பிட்டா தப்பா? பெரிய தப்பு மாதிரி தெரியுதுல்ல! உப்புசப்பு இல்லாத அந்தத் துப்புக்கெட்ட உப்புமாவைச் சாப்பிட்டுத்தான்யா நாங்க உயிர் வளர்க்கிறோம். அட, அம்மாகூட பெத்த அம்மா, சின்னம்மா, பெரியம்மானு மூணு வகைதான். ஆனா, ரவை, கோதுமை, இட்லி, கிச்சடி, சேமியானு இந்த உப்புமா பல நூறு வகை. ஒரே ஒரு நாள் உப்புமாவை மூணு வேளையும் தின்னு பாரு... அப்பத் தெரியும் மிடில் கிளாஸ் கஷ்டம்!

குடும்பத்தோட தியேட்டர்ல படம் பார்க்கிறக் காசுக்கு, பொத்துக்கிடக்கிற பாத்ரூம் கதவை மாத்திடலாம்னு முடிவு பண்ணித்தான்யா திருட்டு டி.வி.டி. வாங்குறோம். இந்தா... 'தலைவா’ படம் தியேட்டர்ல முதல் நாள் கொண்டாடுறதுக்கு முன்னாடியே, திருட்டு டி.வி.டி-ல 30 நாள் கொண்டாடிருச்சே... அந்த பிசினஸுக்கு யார் காரணம்... நம்ம பயகதேன்!

'என்னது... இன்ஜின் ஆயில் மாத்த 250 ரூபாயா?’னு அதிர்ச்சியாகி, ரெண்டு ரூவாய்க்கு எலுமிச்சம் பழம் வாங்கி ஹெட்லைட்டு மேல வெச்சுக்கிட்டு ஓட்டுறவங்க நாங்க. காய்ச்சல் கீய்ச்சல் வந்தா டாக்டர்கிட்டயா போவோம்? நோ நெவர். 'ஜின்’னு முடியிற ஏதாவது மாத்திரையை வாங்கிப் போட்டுக்கிட்டா, உடம்பு கின்னுனு வந்திடும் என்பதே மிடில் கிளாஸ் நம்பிக்கை சார்!

இறங்கவேண்டிய ஸ்டாப் தள்ளி பஸ்ஸு பாகிஸ்தான் பார்டருக்குள்ளயே போனாலும், கண்டக்டர்கிட்ட மிச்சம் எட்டணா சில்லறையை வாங்காம இறங்க மாட்டோம். அப்படிப்பட்ட எங்ககிட்ட மிச்சம் ஒரு ரூபாய்க்குப் பதிலா, சாக்லேட் தந்து டார்ச்சர் பண்றீங்களே அண்ணாச்சி. போனாப் போகுதுனு தூக்கி எறிஞ்சுட்டுப் போக, அது ஹரி பட அருவா இல்ல அண்ணாச்சி, முழுசா ஒரு ரூவா!

பல்லு விளக்குற பேஸ்ட் தீர்ந்துபோனா, பூட்டை எடுத்து அது மேல தேய்ச்சுத் தேய்ச்சுப் பிதுக்கி, அதுல இருக்கிற பேஸ்ட்டை வேஸ்ட் பண்ணாம, திரும்பத் திரும்ப டேஸ்ட் பண்ணுவோம்!

ஆட்டு காது மாதிரி காலர் வெச்ச அப்பா சட்டையை ஆல்டர் பண்ணி பையனுக்குத் தர்றது, அம்மாவோட பழைய புடவையைக் கிழிச்சு பொண்ணுக்கு சுடிதார் தைக்கிறது, அண்ணன் டிரஸ்ஸை தம்பிக்குப் போட்டுவிடுறது, ரெண்டாவதாப் பொண்ணு பொறந்துட்டா 'பொண்ணைப் பையனாட்டம் வளர்க்கிறோம்’னு ஒரு tagline சேர்த்துட்டு அதே சட்டை-டவுசரைப் போட்டுவிடுறதுனு, ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுனதே நாங்கதான் பாஸ்!

சினிமா தியேட்டர் கேன்டீன்ல பாப்கார்ன் வாங்கினா செலவு அதிகம்னு, வீட்டுல இருந்தே கடலை மிட்டாயைக் கர்ச்சீப்ல கட்டிக் கடத்துவோம். ஒண்ணு, வீட்ல இருந்தே வாட்டர் பாட்டில்ல தண்ணி கொண்டுவந்துருவோம். இல்லை, வெளியே எங்கேயாவது தண்ணி பாட்டில் வாங்கினா, அந்தக் காலி பாட்டிலை வீட்டுக்குக் கொண்டுபோயிடுவோம்.

எந்த ஹோட்டலுக்குச் சாப்பிடப் போகலாம்னு நீங்க யோசிப்பீங்க. எந்த ஹோட்டலுக்குப் போனாலும் எதை மட்டும் சாப்பிடணும்னு நாங்க யோசிப்போம். இ.பி.கோ. சட்டத்தை விட அதிக ஓட்டைகள் எங்க பனியன்-ஜட்டியில இருந்தாலும், டி.வி. ரிமோட்ல ஆரம்பிச்சு டி.வி.டி. ப்ளேயர் வரை எல்லாத்துக்கும் சட்டையும் ஜட்டியும் போட்டுவிட்ருப்போம். ரிமோட் ரிப்பேரானா, அதைக் கொட்டிக் கொட்டி வேலை வாங்குவோம். அதே சமயம் டி.வி. ரிப்பேர் ஆச்சுனா, அதைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவோம்.

அம்மாவோ சமையலறையில் டப்பா டப்பாவா சில்லறை சேர்த்துவைக்க, அப்பாவோ டி.வி., ஃப்ரிட்ஜ் ஏன் அயர்ன் பாக்ஸ், குக்கர் வாங்குறப்பக் கிடைச்ச அட்டை டப்பாக்களைச் சேர்த்து வைக்க, பையனோ ஜீரோ பேலன்ஸ் தர்ற பேங்க்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சு கலர் கலரா ATM கார்டு சேர்த்துவைக்க, அக்காவோ ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டுல இருந்து தனக்கு வந்த கிரீட்டிங் கார்டுகளைச் சேர்த்து வைக்க, ஆக மொத்தக் குடும்பமும் கடைசி வரை காசு- பணத்தைச் சேர்த்து வைக்காம வாழுறதுதான் மிடில் கிளாஸ் வாழ்க்கை. இதெல்லாம் வாசிச்சாப் புரியாது...வாழ்ந்தால்தான் புரியும்!

விகடனில் நம்ம @thoatta ஜெகன்

இசைஞானியின் இசையில் உருவான பாடல்களின் ராகங்கள்

1. கனகாங்கி

மோகம் என்னும் - சிந்துபைரவி - ஜேசுதாஸ்

2. தோடி

கங்கைக் கரை மன்னனடி-வருஷம் 16-ஜேசுதாஸ்

3. மாயாமாளவகௌள

நண்டு ஊறுது - பைரவி - டி.எம்.செளந்தர்ராஜன்
தென்னங்கீற்றும் - முடிவில்லா ஆரம்பம் - மலேசியா வாசுதேவன், பி.சுசீலா
மதுரை மரிக்கொழுந்து - எங்க ஊரு பாட்டுக்காரன் - மனோ, சித்ரா
இளமனதில் - மஞ்சள் நிலா - ஜேசுதாஸ், பி.எஸ்.சசிரேகா
மஞ்சள் நிலாவுக்கு - முதல் இரவு - பி.சுசீலா, ஜெயச்சந்திரன்
பூங்கதவே - நிழல்கள் - தீபன், உமாரமணன்
கண்ணின் மணியே - மனதில் உறுதி வேண்டும் - சித்ரா
கனவா இது உண்மையா? - சலங்கையில் ஒரு சங்கீதம் - எஸ்.பி.பி. சித்ரா
ராமநாமம் - ராகவேந்திரா - ஜேசுதாஸ், வாணிஜெயராம்

4. சரசாங்கி

என்றென்றும் ஆனந்தமே - கடல் மீன்கள் - மலேசியா வாசுதேவன்

5. ச்சல நாட்டை

பனிவிழும் - நினைவெல்லாம் நித்யா - எஸ்.பி.பி.
கூடாமல்லிப் பூவே - கல்லுக்குள் ஈரம் - எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
ஆளை அசத்தும் - கன்னிராசி - இளையராஜா


6. சுப பந்துவராளி

வைகறையில் - பயணங்கள் முடிவதில்லை - எஸ்.பி.பி.
வா வெளியே - பாடு நிலாவே - எஸ்.பி.பி., சித்ரா
அலைகளில் மிதக்குற - அந்த ஒரு நிமிடம் - எஸ்.பி.பி. எஸ்.ஜானகி
தீர்த்தக்கரை ஓரத்திலே - தீர்த்தக்கரையினிலே - இளையராஜா


7. கல்யாணி

வந்தாள் மகாலட்சுமி - உயர்ந்த உள்ளம் - எஸ்.பி.பி.
விழிகள் மீனோ - ராகங்கள் மாறுவதில்லை - எஸ்.பி.பி.
நதியில் ஆடும் பூவனம் - காதல் ஓவியம் - எஸ்.பி.பி. ஜானகி
நான் என்பதும் நீ என்பதும் - சூரசம்ஹாரம் - மனோ, சித்ரா
கலைவாணியே - சிந்துபைரவி - ஜேசுதாஸ்
வைதேகி ராமன் - பகல் நிலவு - எஸ்.ஜானகி
நான் பாட வருவாய் - உதிரிப்பூக்கள் - எஸ்.ஜானகி
ஜனனி ஜனனி - தாய் மூகாம்பிகை - இளையராஜா
மஞ்சள் வெயில் - நண்டு - உமா ரமணன்
நிற்பதுவே நடப்பதுவே - பாரதி - இளையராஜா
சிறு கூட்டுலே - பாண்டி நாட்டுத் தங்கம் - இளையராஜா

8. சிம்ஹேந்திர மத்யமம் 

ஆனந்தராகம் - பன்னீர்புஷ்பங்கள் - உமா ரமணன்
பல ஜென்மம் - அழகிய கண்ணே - எஸ்.பி.ஷைலஜா
நீ பெளர்ணமி - ஒருவர் வாழும் ஆலயம் - ஜேசுதாஸ்

9. ஷண்முகப்பிரியா

தகிடதமி - சலங்கை ஒலி - எஸ்.பி.பி.
தம்தனதம்தன - புதிய வார்ப்புகள் - ஜென்ஸி, வசந்தா

10. ரசிகப்பிரியா

சங்கீதமே - கோவில்புறா - எஸ்.ஜானகி

11. பந்துவராளி

ரோஜாவைத் தாலாட்டும் - நினைவெல்லாம் நித்யா - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி

12. வசந்தா

அந்திமழை - ராஜபார்வை - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி,
மான் கண்டேன் - ராஜரிஷி - ஜேசுதாஸ், வாணி ஜெயராம்

13. கௌள

வேதம் நீ - கோவில் புறா - ஜேசுதாஸ்

14. ரசிகரஞ்சனி

அமுதே தமிழே - கோவில்புறா - பி.சுசீலா, உமா ரமணன்
நீலக்குயிலே - மகுடி - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
எதிலும் இங்கு இருப்பான் - பாரதி

15. கெளரி மனோகரி

கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும் - ஜேசுதாஸ், சித்ரா
தூரத்தில் நான் - நிழல்கள் - எஸ்.ஜானகி
கண்ணன் நாளும் - இளமைக்கோலம் - எஸ்.ஜானகி
பொன்வானம் - இன்று நீ நாளை நான் - எஸ்.ஜானகி
தாழம்பூவே - இன்று நீ நாளை நான் - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி, எஸ்.பி.ஷைலஜா
சோலைப்பூவில் - வெள்ளைரோஜா - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
முத்தமிழ் கவியே வருக - தர்மத்தின் தலைவன் - இளையராஜா
தூரத்தில் நான் கண்ட - நிழல்கள் - இளையராஜா
அதிகாலை நிலவே - உறுதிமொழி - இளையராஜா
செம்மீனே செம்மீனே - செவ்வந்தி - இளையராஜா


16. ஹம்ஸத்வனி

மயிலே மயிலே - கடவுள் அமைத்த மேடை - எஸ்.பி.பி., ஜென்ஸி
தேர்கொண்டு வந்தவன் - எனக்குள் ஒருவன் - பி.சுசீலா
நிலா காயும் மேகம் - செம்பருத்தி - மனோ - ஜானகி
சொர்க்கமே என்றாலும் - ஊரு விட்டு ஊரு வந்து - இளையராஜா, ஜானகி
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் - சிங்காரவேலன் - எஸ்.பி.பி., ஜானகி
பூ முடித்து பொட்டு வைத்த - என் புருஷன்தான் எனக்கு மட்டுந்தான் - இளையராஜா(பல்லவி)
காலம் மாறலாம் - வாழ்க்கை - இளையராஜா(சரணத்தில் மட்டும் ‘த’ வருகிறது)
இரு விழியின் வழியே - சிவா - இளையராஜா


17. ஹம்ஸானந்தி

ராகதீபம் ஏற்றும் நேரம் - பயணங்கள் முடிவதில்லை - எஸ்.பி.பி.
நீ பாடும் பாடல் - எங்கேயே கேட்ட குரல் - எஸ்.ஜானகி
ராத்திரியில் - தங்கமகன்- எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
வேதம் - சலங்கை ஒலி - எஸ்.பி.பி., எஸ்.பி.ஷைலஜா
புத்தம்புதுப்பூ பூத்தது - தளபதி - இளையராஜா

18. ரீதி கௌள 

சின்னக்கண்ணன் அழைக்கிறான் - கவிக்குயில் - பாலமுரளிகிருஷ்ணா
தலையைக் குனியும் தாமரையே - ஒரு ஓடை நதியாகிறது - எஸ்.பி.பி., எஸ்.ராஜேஸ்வரி
ராமன் கதை கேளுங்கள் - சிப்பிக்குள் முத்து - எஸ்.பி.பி., குழுவினர்

19. ஆபோகி

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ - வைதேகி காத்திருந்தாள் - ஜெயச்சந்திரன், வாணிஜெயராம்

20. கீரவாணி

காற்றில் எந்தன் கீதம் - ஜானி - எஸ்.ஜானகி
தங்கச்சங்கிலி - தூறல் நின்னு போச்சு - எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
கீரவாணி - பாடும் பறவைகள் - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
மலர்களிலே ஆராதனை - எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
போவோமா ஊர்கோலம் - சின்னத்தம்பி - இளையராஜா
நெஞ்சுக்குள்ளே - பொன்னுமணி - இளையராஜா

21. கரகரப்பிரியா

மாப்பிள்ளைக்கு - நெற்றிக்கண் - பி.சுசீலா, மலேசியா வாசுதேவன்
பூ மலர் இந்த - டிக் டிக் டிக் - ஜேசுதாஸ், ஜென்ஸி
பூ மலர்ந்திட - டிக் டிக் டிக் - இளையராஜா
பூங்காத்து திரும்புமா - முதல் மரியாதை - இளையராஜா

22. மத்யமாவதி

சோலைக்குயிலே - பொண்ணு ஊருக்குப் புதுசு - எஸ்.பி.ஷைலஜா
என் கல்யாண வைபோகம் - அழகே உன்னை ஆராதிக்கிறேன் - எஸ்.பி.ஷைலஜா
தாகம் எடுக்கிற - எனக்காக காத்திரு - உமாரமணன்
நீதானே - நினைவெல்லாம் நித்யா - எஸ்.பி.பி.
அடி பெண்ணே - முள்ளும் மலரும் - இளையராஜா(சரணத்தில் அனுசுரங்கள்)
ஆகாய கங்கை - தர்மயுத்தம் - இளையராஜா
துள்ளித்துள்ளி - சிப்பிக்குள் முத்து - இளையராஜா
ஆனந்தத் தேன்சிந்தும் - மண்வாசனை - இளையராஜா (சரணத்தில் இரண்டு ‘நி’ வருகிறது)
தாலாட்டு - அச்சாணி - இளையராஜா

23. சுத்த தன்யாசி 

ராகவனே - இளமைக்காலங்கள் - பி.சுசீலா
சிறுபொன்மணி - கல்லுக்குள் ஈரம் - இளையராஜா, எஸ்.ஜானகி
காலை நேர - பகவதிபுரம் ரயில்வே கேட் - தீபன்சக்கரவர்த்தி, எஸ்.பி.ஷைலஜா
மனசு மயங்கும் - சிப்பிக்குள் முத்து - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
மாஞ்சோலைக் கிளிதானோ - கிழக்கே போகும் ரயில் - ஜெயச்சந்திரன்
விழியில் விழுந்து - அலைகள் ஓய்வதில்லை - பி.எஸ்.சசிரேகா
புதிய பூவிது - தென்றலே என்னைத் தொடு - எஸ்.பி.பி. எஸ்.ஜானகி
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - உன்னால் முடியும் தம்பி - எஸ்.பி.பி.

24. பிலஹரி

மாமன் வீடு மச்சு வீடு - எல்லாம் இன்ப மயம் - எஸ்.பி.பி.
மனிதா சேவை - உன்னால் முடியும் தம்பி - ஜேசுதாஸ்

25. சந்திரகவுன்ஸ்

வெள்ளிச் சலங்கைகள் - காதல் ஓவியம் - எஸ்.பி.பி.
பாட வந்ததோர் கானம் - இளமைக் காலங்கள் - இளையராஜா (சரணத்தில் அனுசுரங்கள்)
அழகுமலர் ஆட - வைதேகி காத்திருந்தாள் - இளையராஜா

26. மதுவந்தி

என்னுள்ளில் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி - வாணி ஜெயராம்
மீண்டும் மீண்டும் வா - விக்ரம் - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி

27. காப்பி

ஏய் பாடல் ஒன்று - ஜேசுதாஸ், ஜானகி
சங்கத்தில் - ஆட்டோராஜா - இளையராஜா, எஸ்.ஜானகி
தாயும் நானே - எங்கேயோ கேட்ட குரல் - எஸ்.ஜானகி
செம்பருத்திப் பூவு - செம்பருத்தி - இளையராஜா

28. சாருமதி

பாடறியேன் - சிந்துபைரவி - சித்ரா

29. தர்பாரி கானடா

பூமாலை வாங்கி வந்தான் - சிந்துபைரவி - ஜேசுதாஸ்
ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை - இளையராஜா
இசை மேடையில் - இளமைக் காலங்கள் - இளையராஜா
கல்யாண தேனிலா - மெளனம் சம்மதம் - இளையராஜா

30. சிந்துபைரவி

நான் ஒரு சிந்து - சிந்துபைரவி - சித்ரா
மணியோசை கேட்டு - பயணங்கள் முடிவதில்லை - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
மாதா உன் கோவிலில் - அச்சாணி - எஸ்.ஜானகி
நிலவே முகம் காட்டு - எஜமான் - இளையராஜா
தென்றல் வந்து - அவதாரம் - இளையராஜா
முத்துமணிமாலை - சின்னக்கவுண்டர் - இளையராஜா
சாமிக்கிட்ட - ஆவாரம்பூ - இளையராஜா
வளையோசை - சத்யா - இளையராஜா
மானே தேனே - உதய கீதம் - இளையராஜா

31. மோகனம்

நின்னுக்கோரி வர்ணம் - அக்னி நட்சத்திரம் - சித்ரா
பூவில் வண்டு - காதல் ஓவியம் - எஸ்.பி.பி.
நான் ஒரு - கண்ணில் தெரியும் கதைகள் - எஸ்.பி.பி., பி.சுசீலா, எஸ்.ஜானகி
நான் உந்தன் - உல்லாசப்பறவைகள் - எஸ்.ஜானகி
மீன் கொடி தேரில் - கரும்புவில் - ஜேசுதாஸ், ஜென்ஸி
தோகை இளமயில் - பயணங்கள் முடிவதில்லை - எஸ்.பி.பி.
கண்ணன் ஒரு கைக்குழந்தை - பத்ரகாளி - யேசுதாஸ்-பி.சுசீலா
கண்மணியே காதல் என்பது - ஆறிலிருந்து அறுபதுவரை - எஸ்.பி.பி., ஜானகி
தேன் மல்லிப் பூவே - தியாகம் -
வருக வருகவே - மனைவி ரெடி - இளையராஜா
இந்த அம்மனுக்கு - தெய்வ வாக்கு - இளையராஜா
இரு பறவைகள் - நிறம் மாறாத பூக்கள் - இளையராஜா(சரணத்தில் இறுதியில் அனுசுரங்கள்)
வந்ததே குங்குமம் - கிழக்கு வாசல் - இளையராஜா
ஒரு ராகம் பாடலோடு - ஆனந்தராகம் - இளையராஜா

32. சுத்த சாவேரி

ராதா ராதா - மீண்டும் கோகிலா - எஸ்.பி.பி. எஸ்.ஜானகி
மலர்களில் ஆடும் - கல்யாண ராமன் - எஸ்.பி.ஷைலஜா
கோயில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் - எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
காதல் மயக்கம் - புதுமைப்பெண் - ஜெயச்சந்திரன், சுனந்தா
சுகம் சுகமே - நான் போட்ட சவால் - இளையராஜா
மணமகளே - தேவர்மகன் - இளையராஜா

33. ஆரபி

சந்தக் கவிதை - மெட்டி - பிரம்மானந்தம்

34. அமிர்தவர்ஷிணி

தூங்காத விழிகள் - அக்னி நட்சத்திரம் - ஜேசுதாஸ், எஸ்.ஜானகி
மழைக்கொரு தேவனே - ராகவேந்திரா - ஜேசுதாஸ்

35. லலிதா

இதழில் கதை எழுதும் - உன்னால் முடியும் தம்பி - எஸ்.பி.பி., சித்ரா

36. மலைய மாருதம்

கோடி இன்பம் - நெஞ்சில் ஆடும் பூ ஒன்று - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
கண்மணி நீ வர - தென்றதே என்னைத் தொடு - ஜேசுதாஸ், உமா ரமணன்
பூஜைக்காக - காதல் ஓவியம் - தீபன் சக்கரவர்த்தி

37. சாருகேசி

சின்னஞ்சிறு கிளியே - முந்தானை முடிச்சு - எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
உயிரே - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - ஜேசுதாஸ், சித்ரா
ஆடல் கலையே - ராகவேந்திரா - ஜேசுதாஸ்
சிறிய பறவை - அந்த ஒரு நிமிடம் - இளையராஜா
தூது செல்வதாரடி - சிங்காரவேலன் - இளையராஜா
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி - 
இளையராஜா
மணமாலையும் மஞ்சளும் சூடி - வாத்தியார் வீட்டுப்பிள்ளை - இளையராஜா
காதலின் தீபமொன்று - தம்பிக்கு எந்த ஊரு - இளையராஜா
அரும்பாகி மொட்டாகி - எங்க ஊரு காவக்காரன் - இளையராஜா

39. சிவரஞ்சனி

வா.. வா.. அன்பே - அக்னிநட்சத்திரம் - ஜேசுதாஸ், சித்ரா
அடி ஆத்தாடி - கடலோரக் கவிதைகள் - மனோ, சித்ரா
வா வா அன்பே - ஈரமான ரோஜாவே
காத்திருந்து காத்திருந்து - வைதேகி காத்திருந்தாள் - இளையராஜா
குயில்பாட்டு - என் ராசாவின் மனசிலெ - இளையராஜா
வள்ளி வள்ளி - தெய்வ வாக்கு - இளையராஜா

40. சங்கராபரணம்

அழகு ஆயிரம் 
புதுச்சேரி கச்சேரி 
கண்மணி அன்போடு 

41. ஹிந்தோளம்

ஓம் நமச்சிவாயா - சலங்கை ஒலி - எஸ்.ஜானகி
தரிசனம் கிடைக்காதா - அலைகள் ஓய்வதில்லை - எஸ்.ஜானகி
நான் தேடும் செவ்வந்திபூ இது - தர்மபத்தினி - ஜானகி, இளையராஜா
பாட வந்ததோர் கானம் - 
பூவரசம்பூ பூத்தாச்சு - கிழக்கே போகும் ரயில் - ஜானகி
ஸ்ரீதேவி என் வாழ்வில் -
நானாக நானில்லை - தூங்காதே தம்பி தூங்காதே - இளையராஜா (சரணத்தில் அனுசுரங்கள்)
ஆனந்தத் தேன்காற்று - மணிப்பூர் மாமியார் - இளையராஜா
கண்ணா உன்னைத் தேடுகிறேன் - உனக்காகவே வாழ்கிறேன்

42. ஹம்ஸ

சொர்க்கமே என்றாலும் - இளையராஜா
இசையில் தொடங்குதம்மா - ஹேராம்
கன்னிப் பொண்ணு கை மேல - நினைவெல்லாம் நித்யா

43. சரஸாங்கி

மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா - இளையராஜா
தா தந்தன கும்மி கொட்டி - அதிசயப்பிறவி - இளையராஜா
மல்லிகையே மல்லிகையே - பெரிய வீட்டுப் பண்ணக்காரன் - இளையராஜா

44. சக்கரவாகம்

வானிலே தேனிலா - காக்கிச்சட்டை - இளையராஜா (சரணத்தில் ‘ரி’ வருகிறது)
வனிதாமணி - விக்ரம் - இளையராஜா
நீ பாதி நான் பாதி - கேளடி கண்மணி - இளையராஜா
நல்லவர்க்கெல்லாம் - தியாகம் - இளையராஜா

45. பஹாடி

ஏதேதோ எண்ணம் - புன்னகை மன்னன் - இளையராஜா
ஒரே நாள் - இளமை ஊஞ்சலாடுகிறது - இளையராஜா
இந்த மான் - கரகாட்டக்காரன் - இளையராஜா

46. ஆபேரி

மேகம் கறுக்குது - ஆனந்த ராகம் - இளையராஜா
பூவே பூச்சூடவா - பூவே பூச்சூடவா - இளையராஜா
வெள்ளி கொலுசுமணி - பொங்கி வரும் காவேரி - இளையராஜா
வசந்த காலங்கள் - தியாகம் - இளையராஜா
சிந்து நதிக்கரை - நல்லதொரு குடும்பம் - இளையராஜா
சின்னஞ்சிறு வயதில் - மீண்டும் கோகிலா - இளையராஜா

47. ஸ்ரீரஞ்சனி

ஒரு ராகம் - உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் - இளையராஜா
பகலிலே ஒரு நிலவினை - நினைவே ஒரு சங்கீதம் - இளையராஜா
நாதம் எழுந்ததடி - கோபுர வாசலிலே - இளையராஜா

48. விஜயநகரி

குடகுமலைக் காற்றில் - கரகாட்டக்காரன் - இளையராஜா
வண்ணநிலவே - பாடாத தேனீக்கள் - இளையராஜா

49. ஆபோஹி

காலைநேரப் பூங்குயில் - அம்மன் கோயில் கிழக்காலே - இளையராஜா
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே - வைதேகி காத்திருந்தாள் - இளையராஜா

50. வகுளாபரணம்

ஆறும் அது ஆழமில்ல - முதல் வசந்தம் - இளையராஜா
சொந்தமில்லை பந்தமில்லை - அன்னக்கிளி - இளையராஜா

51. பாகேஸ்வரி

காவியம் பாடவா - இதயத்தைத் திருடாதே - இளையராஜா
மழை வருது - ராஜா கையை வச்சா - இளையராஜா

52. ஷ்யாம் கல்யாண்

நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்

53. சமுத்திரப்ரியா

கண்ணம்மா - வண்ண வண்ணப்பூக்கள்

Link : https://www.facebook.com/truetamilan/posts/637522282951323