Wednesday, October 21, 2015

கலைஞர் மட்டும்மா வாழ்த்து சொல்வதில்லை


சில பண்டிகைகளுக்கு கலைஞர் மட்டும்மா வாழ்த்து சொல்வதில்லை??, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன், கம்யுனிஸ்ட் தலைவர்கள், ஈவிகேஎஸ் இளங்கோவன், வைகோ, சீமான் போன்ற தலைவர்கள் கூட, அந்த பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை..

இதோ இந்த மக்கள் தொலைக்காட்சியில் கூட விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி என்றுதான் போடுகிறார்கள்.. ஆனால், பொங்கல் பண்டிகையை இவர்கள் எல்லோரும் சிறப்பாக வாழ்த்தி வரவேற்று கொண்டாடுவார்கள்... தை ஒன்றை தமிழ் புத்தாண்டு என்று வாழ்த்துவார்கள்... இதில் மட்டும் என்ன ஒற்றுமை??

ஏனென்றால், இவர்கள் சார்ந்த திராவிட தமிழ் இனத்துக்கு எதிரான, திராவிடதமிழ் இனத்தை சிறுமைபடுத்தும், திராவிட (அசுர) இனத்தை வெற்றிகொண்டத்தை கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை.... திராவிடத்தை அடிமைபடுத்த திணிக்கப்பட்ட ஆரிய பண்பாட்டுகளை புறம்தள்ளுகிறார்கள்...

அதே நேரத்தில், பொங்கல், தமிழ் புத்தாண்டு போன்ற பண்டிகைகளை சிறப்பாய் கொண்டாடுவார்கள்... ஏனென்றால், பொங்கல் ஒரு தமிழர் பண்பாட்டு விழா.. யாரையும் சிறுமைபடுத்தி, ஒருதரப்பின் தோல்வியை, மரணத்தை கொண்டாடும் பண்டிகை கிடையாது...

அதேபோன்ற வேற்று மத பண்டிகைகள் இதுபோன்று திராவிடதமிழ் இனத்தை சிறுமைபடுத்தி இழிவுசெய்வதில்லை, அதினால் அதற்க்கு இவர்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்...

உண்மையில், ஆரிய பண்பாட்டு தெய்வ வழிபாடாக இருக்கும் பண்டிகைகள் எல்லாம், அக்காலத்தில் திராவிட தமிழர்களை சிறுமைபடுத்தும், "அசுரர்கள் என்பவர் தொல்குடிமக்கள், அவர்களை ஆரியர் சூழ்ச்சியின் மூலம் வென்ற நிகழ்சிகளான விஜயதசமி, தீபாவளி போன்ற "அசுரர்களை வென்ற பண்டிகை கொண்டாட்டங்கள்", ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயக்கர் ஜெயந்தி போன்ற வட நாட்டு ஆரிய திணிப்புகள் தான்..

இப்போதெல்லாம், வடமாநில பழங்குடி இனம் மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட இனமக்கள், அசுரர்களை அழிக்கப்பட்டதை, ஆரியர்கள் வெற்றிகொண்டதை கொண்டாடும் துர்கா பூஜா, ராம நவமி, ஜென்மாஷ்டமி, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு மாற்றாக, தங்கள் முன்னோர்களான அசுரர்களை போற்றும் பண்டிகைகளை கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

////Over 15 districts spread across Uttar Pradesh, Bihar, Jharkhand, West Bengal and Orissa saw Durga Puja with a difference this festival season. Instead of the goddess slaying Mahishasur, the usual story of the Puja, this year, tribals and people belonging to Scheduled Castes and backward classes in these districts are celebrating the "demon king" as a non-Aryan inhabitant and a just king of the land, with Durga representing Aryan invaders. ////

//Forward Press had published stories countering the mainstream narratives on Dussera/Durga Puja, essentially asserting that Mahisasura was an popular adivasi king who was killed by the brahminic Hindus by deception. The Asur tribe in Jharkhand has similar story to tell about its martyr Mahisasura. Here is a counter-narrative on Durga Puja from West Bengal//

http://www.indiaresists.com/durga-puja-celebration-santhal-kings-murder/

http://www.indianexpress.com/news/tribals-backwards-seek-own-voices-in-durga-puja-this-year/1182314/1

Source: https://www.facebook.com/photo.php?fbid=681455275288981&set=a.216599685107878.35766.100002735459170&type=3&theater