Thursday, September 17, 2015

யார் இவர்கள்? இவர்களின் நோக்கம் என்ன? -- By Antony Parimalam

1)ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வி நிறுத்த வழக்கு. பழைய பாடங்களை அச்சிட்டு பல கோடி வீண்.
2)சேது சமுத்திர திட்டத்தை நிறுத்த வழக்கு
3) தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க மிகப்பெரிய தொகை செலவு மற்றும் வழக்கு
4) துறைமுகம் - மதுரவாயல் சாலைப் பணியை நிறுத்தி வழக்கு
5) மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு வழக்கு
6) தாமிரப்பரணி நதி நீர் இணைப்பு பணி பாதியில் நிறுத்தம்.
7) திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டி முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்தல்
8) திமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் உள்ள பணிகளை நிறுத்துதல்
9) நில அபகரிப்பு என்ற பேரில் பிடிக்காதவர்கள் மீது வழக்கு பதிவு செய்தல்
10) மனம் போன போக்கில் அரசு செலவில் அவதூறு வழக்கு போடுதல்
11) மணல் கொள்ளை., தாது மணல் கொள்ளை, கிரானைட் முறைகேடு போன்ற விசயங்களை கண்டுக் கொள்ளாதது.
12) டெண்டரே வைக்காமல் மின்சாரத்தை கொள்முதல் செய்தல்.
13) இந்த துறை அந்த துறை என்று எந்த துறையையும் விட்டு வைக்காமல் அத்தனை துறைகளிலும் ஊழல்
14) தமிழகத்தில் இருந்து தொழில் முதலீடுகள் வெளியே போனதை கண்டுக் கொள்ளாமல் விட்டது.
15) சிறுகுறு தொழில்கள் நசிந்து போனதை கண்டும் காணாமல் விட்டது.
16) மின்சார பகிர்மான கழகத்தின் மீது மிகப்பெரிய கடனை சுமத்தி அந்நிறுவனத்தை பாழ் படுத்தியது.
17) தமிழக அரசின் கடனை ஐந்தே வருடங்களில் இரண்டு மடங்குக்கு மேலாக உயர்த்தி சாதனை படைத்தது.
18) மத்திய அரசு காவல் துறை மேம்பாடு கல்விதுறை மேம்பாடு போன்ற பணிகளுக்கு ஒதுக்கிய பெரும் தொகையை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியது.
19) ஊழல் அதிகாரிகளை தேர்வு செய்து முக்கிய பணிகளில் அமர்த்தியது.
20)மத்திய அரசுடன் இணக்கமான உறவு இருந்தும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி செய்யாமல் இருப்பது.
21) அரசு பணத்தை பெரும் அளவில் இலவவசங்களுக்கு செலவிட்டதுடன் விளம்பரங்களுக்கும் ஆடம்பர செலவீனங்களுக்கும் செலவு செய்தது.
22) தமிழகத்திற்கு தானாக வந்த நான்கு வழிச் சாலைகளுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காதது.
23) தமிழக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் பெற ஒரு முறை கூட முயற்சிக்காமல் தூங்கி வழிவது.
24) யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக ஒரு லட்சம் கோடிக்கும் மேற்பட்ட தொகைக்கு 110 இன் கீழ் தொடர்ந்து அறிவிப்புகளை மட்டும் செய்து விட்டு எந்த நிதியும் ஒதுக்காதது.
25) முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி விளம்பரம் தேடிக்கொண்டது.
இதெல்லாம் சாதனைகளா இல்லை வேதனைகளா ??
நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment