Friday, October 18, 2013

கொள்கைபரப்புச் செயலாளர்

Doha Talkies @dohatalkies


17th October 2013 from TwitLonger

" கொள்கைபரப்புச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள ஜெயலலிதாவின் கடிதத்தை ஏற்றுக்கொள்ளும் படி பொதுச்செயலாளர் ப.உ.ச. அவர்களிடம் சொல்லி , ஏற்றுக்
கொள்ளும்படி சொன்னேன் . அவரும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் . ஆனால் அவருடைய கடிதத்தை பொதுக்குழுவில் வைத்து ஏற்றுக்கொள்வது தான் நலம் என்று கருதியதால் இதுவரை காலம் தாழ்த்தினேன். இந்த விலகல் கடிதத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் .
சில உறுப்பினர்கள் ' மறு பரிசீலனைசெய்யக் கூடாதா ? '
என்று கேட்டார்கள் . மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை . வயதுக்கும் , தகுதிக்கும் மீறிய பொறுப்பில் அவரை நியமித்தது என்னுடைய தவறு . அவரை நம்பி நாம் இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை . கழகம் இரண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றபோதும் அவர் கட்சியில் இல்லை .

என்னைக் கேட்காமலேயே , என் பெயரில் அறிக்கை விடுவது , குறிப்பாக ஆந்திராவில் என்.டி.ஆர் .ஆட்சி குறித்து அறிக்கை விட்டது கண்டிக்கத்தக்கது. இப்படி எனக்குத் தெரியாமலேயே என் பெயரைப் பயன்படுத்துவதை இனியும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது .
ஜெயலலிதா வேறு கட்சிக்குப் போவதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார் . அந்த அம்மையாரைப் பிடித்து காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று விரும்புகின்றவர்கள் , அவர் பின்னே போவதைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை ! "

= புரட்சித்தலைவர் எம்ஜியார் அனைத்திந்திய அண்ணா திமுக பொதுக்குழுவில் பேசியது . 22 - 2 - 1985 அண்ணா , நாளிதழில் .

No comments:

Post a Comment