Wednesday, May 15, 2013

A TwitLonger by Talkativewriter

To..... My ex tweeps

பலதரப்பட்ட புகார்கள், பலதரப்பட்ட சாபங்கள் கடந்த இரண்டு நாட்களாக என்னை நோக்கி! விட்டாள் சூனியம் வைக்கும் அளவிற்கு பொங்கும் சமூக சேவகர்கள்!

ஆனால் நிஜமென்று எதுவும் தெரியாமல் பொங்குவதே அநேகம்! ட்வீட் அப், முதல் நாள் இதே போல் நானும் இரவு இரண்டு மணியளவில் என் ப்ளாக்கை எழுதி முடித்து விட்டு, அதை போஸ்ட் செய்யவே டைம் லைன் வந்தேன்! ஆனால் எடுத்த உடனே என்னைப் பற்றி சிலர் புரணி பேசியது படு பயங்கரமாக இருந்தது!!!

ஆங்கில எழுத்தாளர் இவன் கிட்ட இத காமிச்சாடா-- இந்த வகையறா....

சில மாதங்களுக்கு முன்னே ட்விட்டர் உலகில் புதியதாய் வந்திருந்த பொழுது, ஒரு சக ட்வீட்டேரிடம் பேச நேர்ந்தது, மதுரை என்பதால், கூட கொஞ்சம் ஊர் பாசமும் சேர்ந்து கொள்ள, அந்த பையனின் வயதும் என்னை விட ஒரு 5 வருடமாவது கம்மியாக இருக்கும் என்று உணர்ந்ததால், சரி நேரில் பார்ப்போமே என்று சந்தித்தோம்

அந்த பையனை நேரில் பார்த்ததை நியாபகத்தில் கூட இல்லாத அளவிற்கு அந்த விஷயத்தை மறந்து போயிருந்தேன்! ஆனால் கடந்த வாரம் நடந்த ட்வீட் அப்பின் முதல் நாள் என்னை குறித்து சிலர் முழு போதையில், டைம் லைனில் பேசியது, அருவருப்பாக இருந்தது

அவ அதை காட்டினா டா, இத செஞ்சா டா போன்ற ட்வீட்கள் ..... நேற்று சகோதர பாசத்தில் பொங்கிய சகோதரர்கள் இதை உணர்ந்து பார்த்து, சம்பந்த பட்டவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்!! உங்கள் வீட்டு பெண்ணிற்கும் ஒரு சக தோழிக்கும் நடக்கும் போது யாருக்கும் வர வேண்டிய கோபம்

ஆனால் சம்பவம் நடந்தது இரவு 4 மணியளிவில் என்பதால் யாரும் அதை குறித்து பேசவும் இல்லை, அவ்வுளவு அருவருப்பாக பேசியதனால் அவர்களை திட்டி நானே சில த்வீட்ஸ் போட்டேன்!

அது குறித்து இன்றளவும் வருத்தம் இல்லை! ஏனென்றால், உன் சகோதரியை கொஞ்சம் கூட கெட்ட வார்த்தை கலக்காமல் சாகட்டும் என்று நான் சொன்ன வார்த்தை உனக்கு இவ்வுளவு கோபம் உண்டு பண்ணுகிறதென்றால்,

என்னை, என் உருவத்தை, கிண்டல் செய்த குடிகார கூட்டதை ஏன் நீ சென்று கேள்வி கேட்கவில்லை, ஏண்டா அவள பத்தி அப்படி போட்டன்னு உன் சக த்வீத்ப் நண்பனிடம் நீ கேள்வி கேட்டு இருந்திருந்தால், நீ யோக்கியன்! அது எதுவும் செய்யாமல், உண்மை எதுவுமே புரியாமல், தான்தோன்றித் தனமாக ஒரு ட்வீட்டை மையப் படுத்தி உன் அதி புத்திசாலி முளையை உலகிற்கு வெளிக்காட்டி விட்டாய்

இப்பொழுது பொங்கியிருக்கும் சகோதரி பாசம், ஊர் பேர் தெரியாத சகோதரி பாசம் அப்பொழுதும் பொங்கி இருக்க வேண்டும்! யாரும், எந்த உயிரும் சாக வேண்டும் என்று நினைப்பதில்லை! ஆனால் என்னை அவ்வுளவு அசிங்கமாக பேசிய இளைஞனின் சகோதரிக்கு ஒரு விபத்து என்றவுடன் கடவுளே தண்டனை கொடுத்து விட்டார் என்று நினைத்து உணர்ச்சி வசப்பட்டு கோபத்தில் போட்ட ட்வீட் தான் அது! மனதால் யாருக்கும் சாவை வரவழைக்கும் எண்ணம் எனக்கு கிடையாது

ஆனால் டைம் லைனில் என் அந்த ஒரு ட்வீட் மட்டும் பார்த்த அனைவரும், பெண்ணா இவள், பேய், யாரையும் சாக சொல்கிறாளே, இவள் சாகட்டும், இவள் ஒருத்தருக்கு...... இவளை ஒ.........ம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து ட்வீட் போட்டார்கள்!

இது தவிர்த்து சில பல காவிய வார்த்தைகளை உபயோகித்தார்கள்! கோபத்தில் நான் போட்ட ஒரு ட்வீட் உனக்கு இவ்வுளவு கோபம் கொடுதிருக்குமானால், என்னை அவ்வுளவு கேவலப் படுத்திய அந்த நான்கு பேர் மீது எனக்கு எவ்வுளவு கோபம் உண்டாகியிருக்கும்!

ஆட்டு மந்தைகளாய் சிலரை திட்டுவதை விட்டுவிட்டு எது நிஜம், எதனால் கோபம் என்று யோசிக்க வேண்டும்! யோசிக்க முடியாவிட்டால் கெட்ட வார்த்தைகளை தவிர்க்கக் வேண்டும்!

ஆயிரம் ஸ்க்ரீன் சாட் எடுத்து இவள் கெட்டவள் என்று உலகிற்கு சொன்னாலும், என்னை நன்கு அறிந்தவர் யாரும் நம்ப போவதில்லை! உன் தாராதரம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

இவன் இப்படி பேசின்னான்ல, சாகட்டும்..--- இது தான் என் மனநிலை, ஆனால் நான் அந்த ட்வீட் போட்டது தவறென்று உணர்ந்து ஐந்து நிமிடர்த்திக்கு உள்ளாகவே அதை டெலிட் செய்து விட்டேன், ஆனால் அதன் பிறகு, கொடூரமான கெட்ட வார்த்தைகளால் என்னை ,இதற்கு முற்றும் சம்பந்தமே இல்லாத ஒருவன் பேசியது நியாமா இல்லையா என்று நான் சொல்ல விரும்பவில்லை!!

இப்பொழுதும் இது ஒரு விளக்கம் கொடுக்கும் ட்வீட் லான்கர் இல்லை,அது எனக்கு அவசியமும் இல்லை, முகம் தெரியாத ஆட்கள் இங்கே கேவலமாக பேசியதனால் என் வாழ்விற்கு எந்த பாதகமும் இல்லை! பல மாதங்களாக நன்றாக பழகிய சிலரே மிக அருவருப்பாக பேசியது வருத்தம் தான்! ஆனால், அவர்களின் தரம் புரிந்து விட்டது!

முழு உண்மையும் தெரியாமல் யாரையும் தவறாய் பேசாதீர்கள் !!

மறுபடியும் செத்துபோ என்றாள் யாரும் சாவதுமில்லை, தீ என்றவுடம் சுடுவதுமில்லை!!! உனக்கு தேவையான, நீ உயிரைக் கொடுத்து அலையும் புகழ் உன் அருவருப்பான வார்த்தைகளால் நீ தேடிக் கொண்டாய்! அவ்வுளவு தான்!

ட்விட்டர்ரில் மற்ற பெண்களை விமரிசிக்கும் அளவிற்கு இங்கு யாருக்கும் தகுதி இல்லை, உனக்கு என்னை பிடிக்கவில்லையா, அன் பாலோ செய்து விட்டு போய் கொண்டே இரு, உன்னை யாரும் என்னை தொடர், என் ட்வீட்ஸ் சை ஆர் டி என்று கெஞ்ச வில்லை, உன்னால் எனக்கு ஒரு ப்ரோயோஜனமும் இல்லை!

விருப்பமில்லாத மனிதரிடம் பேச விருப்பமில்லாவிட்டால், இருக்கவே இருக்கிறது ப்ளாக்! அதை செய்து விட்டு போ! நீ எடுத்த அடுத்த ஸ்க்ரீ ஷாட் உன் அக்கா செத்து தான் போவா டா என்று நான் சொன்னதாக தான் இருக்கும்! அதையும் வைத்துக் கொள்!

ஆனால் நீ பேசிய கெட்ட வார்த்தைகளில் நான் ஒரு சதவிகிதம் கூட பேச வில்லை என்பதே உண்மை! இனி இதற்க்கு மேல் யாருக்கும் விளக்கம் கொடுக்க விருப்பமில்லை!

இதே போல் சில மாதங்களுக்கு முன்பு, இதே குடிகார கும்பலால் ட்விட்டர்ரை விட்டு துரத்தப் பட்டு, வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்ணை பற்றி எனக்கு தெரியும், இங்கு இருக்கும் சில ஆண்களின் வெளிவேஷமும் தெரியும்! ஆகவே நான் நல்லவன், அவள் என் சகோதரியை சாகச் சொன்னால் போன்ற மேலோ டிராமா த்வீட்ஸ் போடாமல்,

உன் நண்பன் என் குணத்தை பேசினான், என்னை அசிங்கப் படுத்தினான், யாராய் இருந்தாலும்(நீயாய் இருந்திருந்தாலும்) கோபத்தில் செத்து ஒழியட்டும் என்று பேசி இருப்பாய், உன் வார்த்தைகளின் தரத்தை பார்த்தல், அந்த பெண்ணை தேடிப் பிடித்து கொன்று போட்டிருப்பாய்!

அதே போல், என்ன ஏதென்று தெரியாமல், கிடைத்தால் ஒருத்தி என்று உங்கள் அறிவாளி தனத்தை யாரும் காட்ட வேண்டாம்! அவள செருப்பால அடிப்பேன் டா, நேர்ல பார்த்தா அவளா ஒபப்....டா போன்ற ட்வீட்கள், நீ ஆயிரம் சகோதரியுடைய அண்ணனாய் இருந்தாலும், அவளையும் நீ இதே போல் தான் சந்தர்ப்பம் கிடைத்தால் பேசுவாய் என்பது உண்மை
அதே போல், அவன் செய்ததிற்கு அவன் சகோதரி என்ன செய்வாள் என்று சொன்ன பலர், நான் பேசியதற்கு என் பெற்றோரை இழுத்துப் பேசியது எவ்விதத்தில் நியாயம்! அதை யாரும் கேட்க்க காணோமே, ஒரு வேலை ஆண் உணர்ச்சி வசப் பட்டால் மட்டும் பேசுவார்கள் போல


அந்த சாகக் கிடந்த பெண் பிழைக்கட்டும், ஆனால் அவள் பாவம் தான், உன் சகோதரியாய் பிறந்ததற்கு!

இதைக் குறித்து இதற்கு மேலும் பேசும் எண்ணம் எனக்கு இல்லை! யாரும் இதைப் பற்றி என்னிடம் பேசவோ கேட்கவோ வேண்டாம்! இதோடு முடியட்டும் டாட் 

http://tl.gd/n_1rka6fg

No comments:

Post a Comment