Wednesday, July 17, 2013

செல்வராகவன் பேட்டி

A must read interview of SELVARAGHAVAN with superb answers!  (Copied from FB )

http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/No-filmmaker-has-satisfied-100-per-cent-of-the-audience/articleshow/21104213.cms

///We've been blindly accepting whatever is shown in Hollywood films; even if the film is set in deepest part of Africa and the characters speak in English, we accept it. In Avatar, the characters are not even from this world, and yet, when they speak accented English, we close our eyes and believe it. But, if a person speaks Tamil elsewhere, we ask hundred thousand questions. We must respect our own cinema. Otherwise, we are going to kill it or watch punch dialogues and comedy films all our lives.///

/// In India, people think that VFX means making bullets and cars fly. But there's much more to it than this. I've done two films that have major VFX, and take it from me, it's not easy///

/// During Mayakkam enna, ‪#‎Dhanush‬ came to me and said, 'I've been in the industry for 12 years now, and have done three films with you. So, if you teach me one more time what to do, it's a big insult to me as an actor. It means I haven't learnt any s**t from you.'///

///Have you decided on your next film?
I might work with my brother or do a film with Rana, which is long due, or start my long-pending film in Hindi or even quit the industry. My health is not perfect, and I'm taking everything slowly. And, I want to spend a lot of time with my family; my daughter is not letting me step out of the house. Filmmaking is everything for me, and I'm ready to quit it for my daughter. If some rich man adopts me and pays off my loan, I'd happily stay at home and raise my kids.///

UK parliament arms


Frances Harrison @francesharris0n


17th July 2013 from TwitLonger

#SRILANKA section in vol 2 of UK parliament arms export licenses:

"?493. Sri Lank is listed as a "Country of Concern" in the FCO's latest Human Rights Report, Human Rights and Democracy: The 2012 Foreign and Commonwealth Office Report, published April 2013.[615]

494. In the Westminster Hall debate on 13 December 2012 on the Committees' 2012 Report (HC 419) Mike Gapes said:

A few years ago, during the civil war in Sri Lanka, an arms embargo was put in place and yet when there was a ceasefire, that embargo was not maintained—this was under the previous Government—and the Sri Lankan Government bought all kinds of things, including ammunition, small arms, components and a huge amount of hardware that was used by their armed forces. That ceasefire broke down after 2002, and in 2009 we saw scenes of absolute carnage and brutality when the Sri Lankan armed forces decided to eliminate the Tamil Tigers. I am not here to speak for or defend the Tamil Tigers, but it is clear that there is strong case for the Sri Lankan Government to participate in a proper independent international inquiry into the war crimes that were carried out. Many of those crimes were carried out using weaponry that had been imported from around the world. Officials in the Foreign and Commonwealth Office were unable to tell us whether UK-supplied ammunition, components or weapons were used by Sri Lankan Government forces, but I suspect that they were.[616]

In replying to the debate the BIS Minister, Michael Fallon, commented regarding Mike Gapes' statement that: "I regard him as one of the most well informed, perhaps the best informed, Member of the House on Sri Lanka, and we should take careful note of what he said on that subject today."[617]

495. On 18 February 2013 The Independent newspaper published an article stating that the UK Government had sold arms to the Sri Lankan regime. This was "despite the countries dire human rights record. Figures taken from the ECO database showed that the UK Government had sold over £3 million worth of small arms and weaponry [in the period July to September 2012]. These included pistols, rifles, assault rifles, body armour and combat shotguns. The article stated that: "The sales indicate how far President Mahinda Rajapaksa's government has been welcomed back into the international fold by Britain, despite the behaviour of his armed forces during the brutal last few months of the 2009 civil war." The article continued by claiming that both sides in the civil war had been accused of human rights abuses and that the Sri Lankan government had resisted international calls for an independent investigation into well-documented allegations that Sri Lankan Army soldiers were involved in rape, torture, extra-judicial killings and the deliberate targeting of civilians.[618]

496. The FCO Minister, Alistair Burt, issued a press notice on 20 February 2013 rebutting the Independent article. He said that he was "disappointed to read the article [...] which misrepresented the UK's export control policy towards Sri Lanka." He stated that: "The article suggested the UK had changed its policy towards Sri Lanka and was focused on selling more arms to the Sri Lankan military." The Minister went on to say: "During the period your article covered, [1 July -30 September 2012] only 2 licences were approved to the Sri Lankan military. One licence related to shotgun cartridges for sporting use and the other for communications equipment for a transport aircraft." He continued by stating that the small arms mentioned in the article were for export to private maritime security companies engaged in legitimate work countering the threat of piracy in the region. He said that the export licence applications had been "considered thoroughly" against the UK's export licensing criteria".[619]

497. The ECO quarterly reports on arms export licences for the period 1 January 2012 until 30 September 2012 indicate the following licences approved and refused to Sri Lanka for goods which might be used for internal repression:
2012 Quarter 1 (1 January-31 March 2012)

Licences approved:

SIELs (total value £1,732,115)

Acoustic device for riot control

Body armour

Combat shotguns (160)

Rifles (130)

Small arms ammunition

Weapon sights
2012 Quarter 2 (1 April-30 June 2012)

Licences approved:

SIELs (total value £192,159)

Body armour

Military helmets

OIELs

Body armour

Military helmets

Licences refused

OIELs

Assault rifles, body armour, components for assault rifles, components for body armour, components for machine guns, components for pistols, components for rifles, machine guns, military helmets, pistols, rifles, small arms ammunition, weapon sights.
2012 Quarter 3 (1 July-30 September 2012)

Licences approved:

SIELs (total value £3,741,334)

Assault rifles (600)

Body armour

Combat shotguns (50)

Components for assault rifles

Components for body armour

Components for military communications equipment

Components for pistols

Components for rifles

Military helmets

Pistols (100)

Rifles (550)

Small arms ammunition

Weapon sights
OIELs

Cryptographic software, equipment employing cryptographic software, software for equipment employing cryptographic software, technology for equipment employing cryptographic software.

Body armour, direct view imaging equipment, military helmets.

Assault rifles, body armour, components for body armour, military helmets, small arms ammunition, weapon sights.

Military helmetsP619FP619FP619FP619FP619F[620]
498. On 23 April I wrote to the Secretary of State for Business, Innovation and Skills, Vince Cable requesting that he state which UK Strategic Export Control licences are currently extant for Sri Lanka, stating the application type, annual report summary and goods value in the case of each licence.P620FP620FP620FP620FP620F[621] The BIS Secretary of State, Vince Cable, replied on 10 May 2013 providing a list of extant export licences for the FCO's "Countries of concern".P621FP621FP621FP621FP621F[622] Details of the 49 extant licences listed for Sri Lanka can found in Annex 13 of this Memorandum.

499. I propose that the Committees recommend that the Government states in its Response how the statement made by the FCO Minister Alistair Burt on 20 February 2013 that during the period 1 July-30 September 2012 only 2 arms export licences were approved to the Sri Lankan military can be reconciled with the information put on the BIS website for licences approved to Sri Lanka in this period as reproduced in paragraph 496 of this Memorandum.

500. I propose that the Committees further recommend that the Government in its Response to the Committees' Report states whether it is satisfied that none of the 49 extant UK export licences to Sri Lanka:

a) contravenes the Government's stated policy that: "We will not issue licences where we judge there is a clear risk that the proposed export might provoke or prolong regional or internal conflicts, or which might be used to facilitate internal repression"; or

b) is currently in contravention of any of the arms exports Criteria set out in the UK's Consolidated Criteria and the EU Common Position

including those extant licences to Sri Lanka for: acoustic devices for riot control, body armour, military helmets, all-wheel drive vehicles with ballistic protection, military support vehicles, assault rifles, components for assault rifles, components for body armour, components for rifles, rifles, small arms ammunition, weapon sights, combat shotguns and equipment employing cryptography.
http://tl.gd/n_1rldkdk
 

விடுதலைபுலி

தமிழ்ஈழ விடுதலைப்புலிகளின் அழிவிற்கு விடுதலைபுலிகளே காரணம்!!

எத்தனை கொலைகள் செய்தார்கள், எவரைபேச விட்டார்கள், எவரை செயல்பட விட்டார்கள், எதனை சரியாக செய்தார்கள்..

இவர்களுக்கு எத்தனை வாய்ப்புகள், எத்தனையாவது குறைந்த பட்சமாவது சரியாக பயன்படுத்தினார்களா?

பயன்படுத்த முற்பட்டார்களா? இந்தியாவும் சர்வதேசமும் உங்களுக்கான ஏக போகத்தையும் ராஜதந்திர அந்தசத்தை தந்தார்கள் அல்லவா? எதையாவது சரியாக கையாண்டீர்களா? மாறாக மாற்றுக் துப்பாக்கி வேட்டு வழங்கி கொலை வெறி பிடித்து அலைந்தீர்கள் அல்லவா?

உங்கள் அமைப்பின் முதல் தலைவர் செட்டியை கல்வியங்காட்டில் வைத்து தற்போதைய தலைவர் கொன்ற போதே இதற்கான அத்திவாரத்தை போட நீங்கள் ஆரம்பித்து விட்டீர்கள். இதன் பின்பு சுந்தரம் என்று ஆரம்பித்து அமின், றேகன் என்று தொடர்ந்து சிறிசபாரத்தினம் பத்மநாபா அமிர்தலிங்கம் என்று தடயங்கள் பதித்து ராஜீகாந்தி என்று வெளிநாட்டுத் தலைவர்கள் என்று யாரையும் விடவில்லை. இதன் பின்பு பிரேமதாச என்ற உங்கள் (இந்திய படைக்காலத்து)மீட்போனை? விட்டா வைத்தீர்கள்? புத்திஜீவிகள் அதிபர் ஆனந்தராஜ, விரிவுரையாளர் ராஜினி, நீலன், கேதீஸ்வரன் என்று தொடர்ந்தது உங்கள் துப்பாக்கி கைங்கரியங்கள் இன்றைய நிலமை உங்களுக்கு ஏற்பட பெரிதும் உதவின.

இது மட்டுமா ஆண்டாண்டு காலமாக எங்களுடன் ஒருமித்து வாழ்ந்த முஸ்லீம் சகோதரர்களை ஒரு இரவில் அடித்து விரட்டியும், தொழுகையின் போது துப்பாக்கியால் மரண சாதனம் எழுதி சாதனை புரிந்ததாக தம்பட்டம் அடித்தும், 1985 ம் ஆண்டு அனுராதபுரத்தில் உறக்கத்தில் இருந்த சிங்களப் பொது மக்களுக்கு துப்பாக்கியால் எல்லாளனைக் காட்டி மகிழ்ந்தும் சர்வ தேசத்திடம் நீங்கள் யார் என்பதை சாட்சியப்படுத்தினீர்களே! இதற்கெல்லாம் இன்று அனுபவிக்கின்றீர்கள்!! தெய்வம் நின்று கொல்லும் என்பது இது தானோ?

நீங்கள் திருந்துவீர்கள் என்ற நம்பிக்கை என்றும் எமக்கு ஏற்பட்டதும் இல்லை ஏற்படப்போவதும் இல்லை. அதே போல் உங்கள் அழிவிற்கான ஆரம்பம் எப்போதே ஆரம்பித்து விட்டாலும். இன்று உங்களுக்கு சேடம் இழுக்கும் நிலமை ஏற்பட்டு விட்டது. வெகு விரைவில் புலிப் பாசிசத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும் சங்குதான்.
http://tl.gd/n_1rldlbu

ராஜா ஒன் மேன் ஆர்மி

@sicmafia @mayilSK @nom_d_plum @seevin ராஜா ஒன் மேன் ஆர்மி என்பதில் எல்லாம் விவாதிக்க ஒன்றுமே இல்லை. அதே போல இசைத்துறையில் ஐன்ஸ்டீனைப் போல என்று சொன்னதும் சரியான பார்வை தான் . ஆனால் அவருக்கு வாசித்த இசைக்கலைஞர்களையும், திரைப்பட துறை சார்ந்த பிறரையும் இப்படி கீழிறக்க வேண்டிய அவசியம் இல்லை. எவ்வளவு பெரிய சாதனையாளனுக்கும் அவன் நினைப்பதை வார்த்தெடுக்க கடின உழைப்பு கொண்ட டீம் இல்லாமல் அது வடிவம் பெற்று வருவது சாத்தியம் அல்ல. அதற்கான க்ரெடிட் அவர்களுக்கு கொடுக்கப் பட்டே ஆக வேண்டும். ஆனால் அதற்கு உண்டான எல்லையில் மட்டும் நின்று கொள்ள வேண்டும். நிச்சயம் இளையராஜாவின் இசைக் கோர்வைகளுக்கு வாசிப்பவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது.

ஆனால் ராஜா இல்லாவிட்டால் திரைத்துறையே ஒன்றும் இல்லாமல் போய் இருக்கும் என்பதெல்லாம் பெருமைக்காக சொல்லிக் கொள்ளலாம். அவர் இல்லா விட்டால் என்ன, சினிமா பிழைப்பு யாரை வைத்தும் நடந்திருக்கும்.தமிழ் சினிமாவுக்கு ராஜா கிடைத்தது ஒரு வரலாற்று சாதனையின் மகத்தான அதிர்ஷ்டம். ஆனால் இளையதளம் போன்ற ஆட்கள் அவருக்கு அருகில் இருப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டும் ஆபத்தல்ல ராஜவுக்குமே ஆபத்தாகத்தான் முடியும். இதை 140 ல் முயற்சித்து முடியாததால் ஒரு லாங்கர் கட்டாயமாகி விட்டது

குழந்தை பிறந்தபோது

இப்படித்தான் இது ஆரம்பிச்சு. குழந்தை பிறந்தபோது @rasanai அலைபேசியில கூப்பிட்டாரு. கூப்பிட்ட நேரத்துல மருத்துவமனை அறை முழுக்க மருத்துவரும், செவிலியர்களுமாக நிறைந்த நேரம். கூப்பிட்டவர்ட்ட நான் மெதுவா, உச்சபட்சமா குசுகுசுப்பாத்தான் பேசிட்டு இருந்தேன். அதுவுமில்லாம் அதுதான் நாங்க முதன் முறையா பேசிக்கிறது. ஆனாலும் கலகலப்பா பேசுற மாதிரிதான் நான் ஆரம்பிச்சேன். ஆனா @rasanai என்னமோ காவலன் விஜய் மாதிரி இல்லை இல்லை அதுக்கும் மேல யாரு?.. ஆங் சிங்கம்-2 சூரியா கணக்கா வெறப்பா பேச ஆரம்பிச்சாரு. எனக்கோ சிரிப்பான சிரிப்பு.. சமாளிச்சுட்டு கட் பண்ணிட்டேன். அப்ப போட்ட ட்விட்டுதான் இது https://twitter.com/vivaji/status/355724349052956672 . அப்புறமா @Sricalifornia யும் வந்து அதையே சொல்ல கலாய்க்கலாம்னு முடிவு செஞ்சோம். நாள் குறிக்கப்பட்டது செவ்வாய் (என்னதான் வெட்டியா இருந்தாலும் மூனு பேரும் ஒரே நேரத்துல வெட்டியா இருக்கனும்ல). என்கிட்டேயும் @Sricalifornia யும் @rasanai யோட அலைபேசி இருந்தாலும் புதுசா ஒரு ஆள் பேசினா எப்படி எண் கிடைச்சதுன்னு சந்தேகம் வருமேன்னு நினைச்சேன். உடனே @rasanai ஊரம்மா @rakamali ஞாபகத்துக்கு வந்தாங்க. அவுங்ககிட்ட பேசி அவுங்க கோவில்ல ஒரு பெரியவர் சந்திச்சதாவும், அவர் @rasanai கிட்ட பேச விரும்புறதாவும் கொஞ்சம் பில்ட்- அப் ஏத்திவிட்டாச்சு. அப்புறமா நான் Caller ID மறைச்சு, @rasanai ஊருக்குப் பேச (International Call) வழி ஏற்படுத்தவுமே 20 நிமிசம் ஆச்சு. அதுக்கு முன்னாடி அவரோட ஃபாலோவர் பேரைப் பார்த்து ட்விட் போடாத ஒருத்தரை பெரியவர் ஆக்கிட்டேன். இதுதான் முன்னுரை

@Sricalifornia அழைச்சேன், பிறகு @rasanai Conferenceல் அழைச்சேன்.

ஹலோ

ஹலோ, வணக்கம், நான் சண்முக வேலாயுதம் பேசுறேன். நீங்க ரசனைதானே?

ஆமாங்க

நான் கோவிலில் @rakamali யைச் சந்திச்சேன். அவுங்ககிட்ட உங்க நம்பர் வாங்கினேன். நானும் உங்க ஃபாலோவர்தான்.

சொன்னாங்க, சொன்னாங்க. நீங்க எங்கே இருக்கீங்க?

அரோரா (கூகிள் பண்ணி எடுத்த பக்கத்து ஊர்தான் அது). இங்கே மகள் வீட்டுக்கு வந்தேன், போன மாசம்தான் வந்தேன். இங்கே பொழுது போகலை, அதனாலதான் ட்விட்டர்ல இருக்கேன் [சரியாப் பேசறனா?]


ஓஹ் அப்படிங்களா? மகள் இங்கேதான் இருக்காங்களா?

ஆமா, ஆனா அவுங்களுக்கு இப்பத்தான் கல்யாணம் ஆகி 2 மாசம் ஆச்சு [என் மனசுக்குள்ள இது ஓடுது: ஆ, @Sricalifornia க்கு இந்த ஊரைப் பத்தி என்ன தெரியும்?, இரு தேனிலவு நேரத்துல அப்பனுன்னு இங்கே என்ன வேலை ]

ஓஹ் அப்படிங்களா? [அடப்பாவி, எந்தக் கேள்வியுமேவா தோணலை. அம்புட்டு அம்மாஞ்சியா நீ?]

நீங்க நல்லா ட்விட் போடுறீங்க [அட்றா அட்றா] உங்க ட்விட்டெல்லாம் படிக்கும் போது ஏதோ எங்க வீட்டு திண்ணையில உக்காந்துட்டு நீங்க பேசுறதையெல்லாம் கேட்குறாப்பலயே இருக்கும் [நம்புறாருடா,, ஹ்ம்ம் அழுத்து] மனசு எல்லாம் லேசாகி ஒரு குடும்பமாட்டம் இருக்கும் [இன்னும் நிறைய சொன்னேன், மறந்துட்டேன் :( ]

ஹிஹி, தேங்கஸ்ங்க [ இதுக்கேவா? ரொம்ப நம்புறாருடா, இனிமே கலாய்க்கவே வேணாம்]

நீங்க எங்கே வேலை பார்க்கிறீங்க?

*(&(*)&
(*&^*(&

)(%^*&%(*&%^&$%^%#*$*

(அவ்வளவு முக்கியமில்லா பேச்சுகள்)

முடிச்சிக்கலாங்க. போதுங்க. நான் இளா பேசுறேங்க. Conferenceல @Sricalifornia இருக்காங்க

@Sricalifornia - சிரிக்கிறாங்க (குறைந்தது 1 நிமிசத்துக்கு) நானும் சிரிக்கிறேன்.

ஹலோ, யாருங்க? ஆமா.. ஹோ நோ..? ஸ்ரீ நீங்களுமா? [மன்னன்ல குஷ்புகிட்ட தான் ஒரு பணக்காரர்னு சொல்லி பேருந்துல பில்ட் அப் பண்ணிட்டு அலுவலகம் வந்து குஷ்புகிட்ட பல்பு வாங்கி ரஜினி சிரிப்பாரே அதை விட மொக்கையா பல ரியாக்சன் வந்துச்சு, அது எல்லாம் எழுத்துல வடிக்கவே முடியாது]

அப்புறம் நாங்க கலாய்ச்சிட்டே இருந்தோம். "அதுல ஒன்னு ஒடக்கானைப் பார்த்து துள்ளிக்குதிச்சு ஓடுறாப்ல ஒரு படம் போட்டீங்களே அப்படியா?" https://twitter.com/Rasanai/status/356122605167730688/photo/1

-------------------------
எச்சரிக்கை: இனிமே யாராவது ரசனைக்கு ரசிகன்னு பேசினாலோ, கூப்பிட்டாலோ என்னை கண்டிப்பா திட்டுவாரு. அதனால ஜாக்கிரதையா இருந்துக்குங்க.
http://tl.gd/n_1rld9gr

இன்றைய ஹிந்து


U1 YamunaI @ItsYamunai


17th July 2013 from TwitLonger 

பேஸ்புக் பயன்படுத்துவதனா ல் வரும் பிரச்சனைகள் பற்றி இன்றைய ஹிந்துவில் ஒரு பத்தி வந்துள்ளது. அவை:

1. பயனாளர் வன்மம் மிக்கவர் ஆகிறார்

2. அவருக்கு தன்னைப் பற்றி மிகையான
சுயபிம்பம் ஏற்படுகிறது.
அதாவது தற்பெருமை.

3. இது தான் ரொம்ப முக்கியம். ஒருவர்
தன்னுடைய சந்தோஷமான வாழ்க்கையை,
வெற்றிகளை ஸ்டேட்டஸாகவும், படங்களாகவும்
பகிர்ந்து கொள்ளும் போது பிறர்
வயிற்றெரிச்சல்பட்டு மனம் துவண்டு மன
அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்.

4. ஆக மகிழ்ச்சியான பேஸ்புக் ஸ்டேட்டஸ்களால்
பிறர் துக்கத்துக்கு உள்ளாகிறார்கள்.
.
Abilash Chandran 

செல்வராகவன்


Haranprasanna @haranprasanna


17th July 2013 from TwitLonger 


செல்வராகவன் தமிழின் மிகச்சிறந்த இயக்குநர்களுள் ஒருவர். இன்றிருக்கும் ஒரே நம்பிக்கை இயக்குநர் (புது வரவுகளான நகொபகா, சூது கவ்வும் தவிர) இவர் மட்டுமே. ஏதோ ஒரு விரக்தியில் அவரது பேட்டி வெளிவந்திருக்கிறது. அவர் இத்தனை வருத்தப்படத் தேவையில்லை. மயக்கம் என்ன கூட என் ரசனையில் எனக்கு மிகவும் பிடித்திருந்த ஒரு படமே. ஆயிரத்தில் ஒருவன் இடைவேளைக்குப் பிறகு அட்டகாசமாக இருந்தது. அசாத்திய கற்பனை. அவரது புதுப்பேட்டை தமிழின் முக்கியமான படங்களுள் ஒன்று. எனவே அவரது வருத்தத்தையெல்லாம் விட்டுவிட்டு, தன்னை யார் தத்தெடுப்பார்கள் என்பதையும் மறந்துவிட்டு, (குமுதம் பேட்டியில் அவர் தத்து பற்றி எதுவும் பேசவில்லை. இந்த தத்து பேட்டி இணையத்தில் மட்டுமே காணக் கிடைக்கிறது. செல்வ ராகவன் அப்படிச் சொல்லவில்லை என்றால், அதை விட்டுவிட்டு மற்றவற்றை வாசிக்கவும். குமுதம் பேட்டியில், ‘இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு ஓய்வு பெற யோசிக்கிறேன்’ என்றே சொல்லியிருக்கிறார்) அவலமான நிலையில் உள்ள தமிழ் சினிமாவை அவர் தத்தெடுக்கவேண்டும். அவர் தத்தெடுத்தது பற்றி இன்று பலவாறாகக் கிண்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. அதையெல்லாம் அவர் பொருட்படுத்தக்கூடாது. உண்மையில் செல்வ ராகவன் மிகச் சிறந்த இயக்குநர் (7ஜி மிகவும் சுமாரான படம்தான் என்றாலும்!) என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. 

Tuesday, July 9, 2013

அது தான் இளையராசா


ட்விட்டர்MGR @RavikumarMGR


8th July 2013 from TwitLonger

விகடன் மேடை - பாரதிராஜா பதில்களுக்கு வந்த கமெண்ட்டில் ஒருவர் பகிர்ந்த விஷயம்!

பாரதிராஜாவின் தாயாரை தன் தாயைப் போல் மதித்தார் இளையராஜா! இந்த சம்பவம் பாரதிராஜாவாலேயே இன்னொரு பிரபலத்திடம் பகிர்ந்து கொண்டது!

ஒரு முறை சென்னையில் பாரதிராஜாவின் வீட்டுக்கு அல்லிநகரத்திலிருந்து அவரது தாயார் கருத்தம்மா வந்து பத்து தங்கியிருந்து விட்டு ஊருக்கு செல்வதற்கு முன் பாரதிராஜாவிடம், “நான் போயி ராசாகிட்ட சொல்லிட்டு அப்படியே ஊருக்கு போறேம்பா” என்று சொன்னாராம். இவரும் சரிம்மா போயிட்டு வான்னு அனுப்பி வச்சாராம். ராஜா வீட்டுக்குக்கு போனவுடன் ராஜா, வாம்மா...! என்று ஆர்வமாக வரவேற்றாராம்! எப்போ வந்தே!? என்று கேட்டாராம். தான் வந்து பத்து நாள் ஆகியதை அவங்க சொல்லியுள்ளார்கள். பத்து நாள் ஆச்சா..!!? ம்.. அப்போ, எங்கிட்ட சொல்லிட்டு போகிறத்துக்காக வந்துருக்கிறியா? என்றாராம். ஆமாம் என்று அந்த தாய் சொன்னார். ரயில் டிக்கட் எல்லாம் எடுத்து கொடுத்துருக்கானா? காட்டு பாப்போம் என்று கேட்டாராம். அந்த அம்மா டிக்கட்டை எடுத்துக் கொடுக்க, வாங்கிய மாத்திரத்தில் அதை சுக்கு நூறாக கிழித்தெரிந்தாராம்! “அவன் வீட்டுல பத்து நாளு இருப்ப, எங்கிட்ட சொல்லிட்டு போக வருவியா!? இங்க இரு!, நான் சொல்லும்போது தான் நீ போகனும்”னு அன்பு கட்டளையிட்டாராம்! பின்பு சில நாட்கள் தன் வீட்டில் உபசரனைகள் செய்து, நகைகள், துணிமணிகளெல்லாம் எடுத்து கொடுத்து விமானம் மூலம் ஊருக்கு அனுப்பி வைத்தாராம்!

அது தான் இளையராசா, இதை கூட பெருமையாக சொன்னது இளையராசா இல்லை.. பாரதிராசா தான் இதை கூட வெளியில் சொன்னது...
http://tl.gd/n_1rl84au
 

பாவம் சிவக்குமார்


ரைட்டர் நாகா® @NChozhan


8th July 2013 from TwitLonger 

சிங்கம் II வெற்றி சிலருக்கு பீதியை கிளப்பி விட்டுடுச்சி போல. முன்னே எப்போ பாரு விளம்பரத்துல குடும்பத்துல இருக்கிற மொத்தப் பேரும் வந்து டார்ச்சர் பன்றாங்கன்னு சொல்லிக் கிண்டல் அடிச்சாங்க. அதன் வருமானம் எல்லாம் அகரம் பவுண்டேஷனுக்கு போகுதுன்னு சொன்னவுடனே என்ன பன்றதுன்னு தெரில.

இப்போ அவரைக் குள்ளம், அவர் அனுஷ்காவுடன் டான்ஸ் ஆட ரொம்ப கஷ்டப்படுறார், அகரம் பவுண்டேஷன் விளம்ரத்தை பெருசா செய்யறார்ன்னு நக்கல் அடிக்கிறாங்க. இது நம்ம ஊர்ல எப்பவும் நடக்கிறது தானே. எதுவும் முடிலயைன்னா தனிமனித தாக்குதல்.

இதுல துப்பாக்கி வசூலை மிஞ்சிடுச்சுன்னு சொன்னவுடனே இன்னும் காட்டமா கமெண்ட்ஸ். 'தலிவா' வரட்டும் பார்க்கலாம்னு டயலாக் வேற.
நாங்க அதையும் பார்க்கத் தானே போறோம்? சுறா, ஆதி, வில்லு எல்லாம் பார்த்தவங்க தானே நாங்க..

பாவம் சிவக்குமார், சூர்யா வளரும் போது காம்ப்ளான் எல்லாம் கிடைக்கல போல.

பிகு: நான் சூர்யா இரசிகன் எல்லாம் கிடையாது. :'(
http://tl.gd/n_1rl7vt0

ஈழத்தமிழ் முஸ்லிம்கள்


Doha Talkies @dohatalkies


9th July 2013 from TwitLonger 

சக ஈழத்தமிழ் முஸ்லிம்கள் மீது பிரபாகரனின் கொலைவெறியாட்டம்

ஏறாவூர் மற்றும் காத்தான்குடியில் விடுதலைபுலிகளின் படுகொலைகள்

இரக்கமற்ற விடுதலைபுலிகள் இலங்கை, ஏறாவூரில் ஆகஸ்ட் 11ம் தேதி 1990-ல் 116பேர்கள் மற்றும் , ஆகஸ்ட் 4-ம் தேதி 1990-ல் காத்தான்குடியில் 147சக தமிழ் முஸ்லிம்களைகொன்று குவித்தனர் .விடுதலைப்புலிகள்.

உலகிலேயே விடுதலை போராட்டம் என்ற பெயரில் சக இன மக்களை கொன்று குவித்த ஒரே தீவிரவாத இயக்கம் விடுதலை புலிகள் இயக்கம் தான்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் வெறிபிடித்த அலைந்த பாசிச விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் சக தமிழ் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள் பல.

சர்வதேச சமூகமும், மேகத்திய ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் சக தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்த அக்கிரமங்களை இதுவரை கண்டுகொள்வில்லை. தமிழ் முஸ்லிம் சமூகமும் புலிகள் மேற்கொண்ட அந்த அராஜக நிகழ்வுகளை உலகிற்கு உரியவகையில் எடுத்துக்கூற தவறியுள்ளது.

இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன. 'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து ஈழத்தமிழ் முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து ஈழத்தமிழ் முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்' இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.

ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த ஈழத்தமிழ்முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14,844.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர ஈழத்தமிழ்முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள், முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த ஈழத்தமிழ்முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர். வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.

இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர், பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள், 36 பேர் பெண்கள், 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர்.

மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது. 1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட ஈழத்தமிழ் முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறை, முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 ஈழத்தமிழ்முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறை, அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது ஈழத்தமிழ்முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

வடக்கிலிருந்து ஈழத்தமிழ்முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர். இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.

மட்டக்களப்பு ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் 12 ஆம் திகதி, ஆகஸ்ட் மாதம் 1990 ஆம் கொலை வெறியுடன் பாய்ந்த புலி பயங்கரவாதிகள் 116 முஸ்லிம்களை சுட்டும், வெட்டியும் திட்டமிட்டு படுகொலை செய்தனர். புலிகளின் இந்த கொலைவெறி பிடித்த தாக்குதலில் 60 முஸ்லிம் குழந்தைகள் மரணத்தை சுவாசித்தனர்.
மானிட குலத்திற்கு எதிராக புலிப் பயங்கரவாதிகள் புரிந்த போர்க்குற்றத்திற்கு இதனையும்விட ஆதாரங்கள் வேண்டுமா..??
இதோ புலிகளின் கொலைவெறிக்கு பலியான குழந்தைகளின் பெயர் வயது மற்றும் விபரங்கள்

1- ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்

2- ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்

3- எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்

4- ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்

5- எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்

6- எஸ். சனூஸியா- (01 வயது)-பெண்

7- ஏ. றிபாகா -(01 வயது) -பெண்

8- எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்

9- எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்

10- யூ. லாபிர் -(03 வயது)- ஆண்

11- எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்

12- ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்

13- எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்

14- எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்

15- எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்

16- எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்

17- எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்

18- எம். ஐ. எம். தாஹிர்-(06 வயது)- ஆண்

19- எம். எல். எப். றிஸ்னா-(05 வயது)- பெண்

20- எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்

21- எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )

22- எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)

23- எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)

24- ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்

25- ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்

26- எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)

27- எம். ஐ. ஜரூன் -(10 வயது)

28- எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)

29- எம். ஐ. அஸ்றப் -(11 வயது)

30- எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)

31- எம். கமர்தீன் -(12 வயது)

32- எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)

33- ஏ. எல். மக்கீன்-(12 வயது)

34- எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)

35- ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)

36- வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)

37- எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)

38- எம். எஸ். பைசல்-(13 வயது)

39- எம். பீ ஜவாத்- (13 வயது)

40- யூ. எல். எம். அனஸ்- (13 வயது)

41- ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)

42- எச். எம். பௌசர்-(14 வயது)

43- ஏ. ஜௌபர்- (14 வயது)

44- எம். எஸ். எம் சகூர் -(14 வயது)

45- ஏ. சமீம்- (14 வயது)

46- எம். இஸ்ஸதீன்- (15 வயது)

47- எம். எம். எம். பைசல் -(15 வயது)

48- எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்

49- எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்

50- எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்

51- எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்

52- எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்

53- எம். எல். சமீமா-(10 வயது)- பெண்

54- எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்

55- எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்

56- ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்

57- ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்

58- யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்

59- ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்

60- ஏ. எல் சமீர்-(10 வயது) -ஆண்

பயங்கரவாதப் புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களையும், போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தும் செயற்பாட்டில் குதிக்கவேண்டும். புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களை உங்கள் பேஸ்புக், மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட ஏனைய இணையத் தளங்களிலும் பதிவுசெய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்..!!

வீடியோ ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது

http://www.youtube.com/watch?v=lOzgJE16GgU

http://www.youtube.com/watch?v=Go4fPNmGo0Q

http://www.youtube.com/watch?v=YxVlwNNqmTM

http://www.youtube.com/watch?v=ocxm8ucdPbA

http://www.youtube.com/watch?v=sRK-RyH01Eo

http://www.youtube.com/watch?v=rKoqgaPqrEU
http://tl.gd/n_1rl8n0v

அபத்தம்

முதலில் தமிழ்நாட்டில் சாதிகள் ஒழிய வேண்டும் என்கிற கூற்றே அபத்தம். சமூக உளவியல் அடிப்படையில் ஒவ்வொரு குழுவுக்கும் தேவையான சமூக பாதுகாப்பு அந்தந்த சாதியின் identityயின் அடிப்படையில் தான் அமைந்து வருகிறது. இது நல்லதா, கெட்டதா என்பது வேறு விவாதம். ஆனால் இன்றைய சூழலில் சாதி ரீதியிலான identity ஒரு பாதுகாப்பு. ஆக சாதி இல்லாத தமிழகம், அல்லது இந்தியா என்பதே ஒரு utopia.

திராவிட கட்சிகளின் மீது பழியைப் போடுதல் அடுத்த அபத்தம். திராவிட கட்சிகள் இருப்பதனாலேயே தான் இன்றைக்கும் சமூக நீதி தமிழகத்தில் இருக்கிறது என்பதில் தெளிவாக இருக்கிறேன். இதே பிரச்சனை வடக்கிலோ, மேற்கிலோ நடந்தால் அது இங்கிலிஷ் சேனல் செய்தி. அதை தாண்டி எதுவுமில்லை.

இந்த இழப்பினை வெற்றியாக பாமக கொண்டாடுதல் எவ்வளவு அபத்தமோ, அதற்கு ஈடான அபத்தம் “இளவரசனுக்கு வீரவணக்கம்” என்று விடுதலை சிறுத்தைகள் போஸ்டர் ஒட்டுவது. காதல், அதற்கு பின்னான கலவரம், உயிரிழப்புகள், மோதல்கள் என எல்லாமே மோசமானவை தான் என்றாலும், இந்த காரணங்களுக்காக இணையமெங்கும் பாமக-வினை ஒரு சாதி வெறி கட்சி என்று சொல்லி மட்டம் தட்டுதலில் எனக்கு உடன்பாடில்லை. தர்மபுரி கலவரத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் 53 சாதி கட்சிகள் கூட்டம் போட்டு இருக்கின்றன. தடை செய்ய / சமூகரீதியாக புறக்கணிக்க நம்மால் முடியுமா என்று பார்க்க வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த இணைய பொதுவெளி எதிர்ப்பு என்பது வன்னியர் ஒட்டுகளை நாமாகவே ஒருங்கிணைக்கிறோம் என்பதில் போய் முடியும். அரசியல் கணக்குகளில் ராமதாஸ் தோல்விகள் பெற்றிருந்தாலும், பெரும்பான்மையான அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட ஒட்டு வங்கி என்பது எந்த அரசியல் கட்சிக்கும் தேவை.

19 வயது இளவரசன் காதலிக்கக்கூடாதா என்றெல்லாம் கேள்விகள் வருகிறது. 19 வயது இளவரசன், 22 வயது திவ்யாவை ஏன் காதலித்தான் என்பதில் சில சமூக சிக்கல்கள் இருக்கின்றன. தரும்புரியும் தமிழ்நாடும் சச்சின் -அஞ்சலியோ, அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராயோ வாழும் இடங்கள் கிடையாது. காடு வெட்டி குரு, அன்புமணி ராமதாஸ் உட்பட பலர் மாமல்லபுரம் கூட்டத்தில் பேசியதில் எனக்கு உடன்பாடில்லையென்றாலும், இத்தனை நாள் பெருங்கலவரங்கள் செய்யாத ஒரு கட்சி, ஒட்டுக்காக ஒரு ஊரை கொளுத்தும் என்று நம்புவதிலும் எனக்கு உடன்பாடில்லை.

இது சமூக புரிதல் சார்ந்த பிரச்சனை. இன்றைக்கு ராமதாஸ் ஒரு ஜாதி வெறியர் என்று சொல்லும் இதே இணைய (பேஸ்புக், டிவிட்டர், இன்னபிற) அறிவுஜீவிகள் தான் மோடி வந்தால் இந்தியாவுக்கு நல்லது என்று நம்புவர்கள். இவர்கள் தான் அன்னா அசாரேவால் இந்தியாவுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பியவர்கள். லஞ்சமில்லாத, ஊழலில்லாத, சாதியில்லாத ஒரு சமூகம் மலரும் என்று எழுதிக்கொண்டிருப்பவர்கள். சாத்தியமில்லாத, சாத்தியப்படாத விஷயங்களை மட்டும் யோசிப்பவர்களுக்கு சமூக உளவியல் காரணங்களும், நோக்கங்களும் புரியும் என்று எனக்கு தோன்றவில்லை. http://tl.gd/n_1rl8hma

Monday, July 8, 2013

சிங்கம் 3 - A Tamil Twitter part 2


வேதாளம் @iVedhaLam


8th July 2013 from TwitLonger

இடைவேளைக்கு பிறகுதான் தெரியுது ரகுசி வெறும் இன்ஸ்டா ல மட்டும் இல்ல, ஃபேக் ஐடில இருந்து நம்மளயெல்லாம் வாட்ச் பண்ணியிருக்காருன்னு. இவரு ப்ளாக் பண்ண எல்லாரும் எப்படியோ தகிடுதித்தம் பண்ணி அன்-ப்ளாக் ஆகிடுறாங்க. அந்த இங்கிலீஸ் ஐடியும் அன்-ப்ளாக் ஆகி தப்பிக்க அப்பதான் தெரியுது இந்த கும்பலுக்கே அவன்தான் தலைவன்னு. ஆனா ஐந்த ஐடி பத்தி எந்த டீட்டெய்லும் கிடைக்காம போயிட்டுது.


அந்த இங்கிலீஸ் ட்விட்டர் யாரா இருக்கும்ன்னு இன்வெஸ்டிகேஷன ஆரம்பிக்குறார் ரகுசி. அவருக்கு யார வேணாலும் ப்ளாக் பண்ற உரிமைய குடுக்குறார் பஞ்சாயத்து. தேவைன்னா ராணுவத்த (@iGhillli) கூட பயன்படுத்திக்கலாம்ன்னு சொல்லி ஏட்டு எரிமலை (@iKrishS) ய இன்ஸ் ஆக்கி துணைக்கு அனுப்பி வைக்கிறார்.


அந்த இங்கிலீஸ் ட்விட்டர் ஐடிய கண்டு பிடிக்கணும்ன்னு கட்டதொர டிஎம்ம வாட்ச் பண்ண சாஃப்ட்வேர் எழுதுறார் ரகுசி. ஒரு வேளையா டிஎம் மெசேஜ் எல்லாம் கிடைச்சிடுது. ஆனா ரொம்ப மனசொடிஞ்சு போயிடுறார் ரகுசி. இருக்கிற எல்லா ஃபேக் ஐடிக்கும் ஐ லவ் ஊஊஊ மெசேஜ் அனுப்பி மானாவாரியா திட்டு வாங்கியிருக்க கட்டதொரய நெனச்சு கண்கலங்குறார் ரகுசி.


அந்த சமயத்துல ரகுசி அக்கவுண்ட்ட ஹேக் பண்ணி எல்லாரும் ஸ்பேம் பண்றார் திகு. அப்ப ஒரு ட்வீட் போடுறார் ரகுசி “நீ என் அக்கவுண்ட்ட ஹேக் பண்ண நான் தாங்கிகிட்டேன். ஒரு நாள் நான் உன் அக்கவுண்ட்ட ஹேக் பண்ணுவேன். அப்ப நீ தாங்க மாட்ட”ன்னு.


அந்த சமயத்துலதான் அன்-ப்ளாக் ஆன அந்த இங்கிலீஸ் ட்விட்டர் ரகுசிக்கு டிஎம்ல மொக்கை தமிழ் ட்விட்டர்ன்னு திட்ட உடனே டென்ஷனான ரகுசி ரிப்ளை பண்றாரு..

“ஐ வி மேக் யூ அண்டர்ஸ்டேண்ட் த பவர் ஆஃப் தமிழ் ட்விட்டர்”.

அந்த இங்கிலீஸ் ட்விட்டர்தான் ப்ரகாஷ் (@F5Here) (எப்பூடி??).

அதுக்கப்புறமா ரெண்டு பேரும் டிஎல்லயே சண்டை போட்டுக்குறாங்க.

RT @F5Here: I am the king of Indian Twitter

RT @rAguC: A Tamil twitter will be the king of Indian twitter. I will make you understand that. I will come to u soon and will Block you.

ஊரே பதறிப்போய் கிடக்கு. ப்ரகாஷ்ஷ பிடிக்க ஆப்பரேஷன் ஹெச்’ன்னு ஒண்ணு ஆரம்பிக்குறார் ரகுசி.

பயந்துபோய் நம்ம ப்ரகாஷ் செக்கொமொக்கோஸ்லோவின்னு ஸ்பெல்லிங் தெரியாத ஒரு நாட்டுக்குப் போயி ட்விட்டுறாரு. ஒரே நைட்ல அந்த நாட்டுக்குப்போயி அங்கயே வெச்சு மொத்த கும்பலோட ட்விட் ஐடியயும் பாஸ்வேர்ட் ஈமெயில் மாத்தி டீ ஆக்டிவேட் பண்றாரு சார் நம்ம ரகுசி...

அப்ப ஒரு வசனம் சார்..

ஆப்பரேஷன் எஃப் தானே வரனும் அதென்ன ஹெச்’ன்னு தானே யோசிக்கிற.. ஹெச் 4 ஹீனா ரப்பானிடா’ன்னு சொல்லி இண்டர்னேஷனல் HRK ரசிகர் பேரவைக்கு தலைவராகுறார் ரகுசி... :))
http://tl.gd/n_1rl7vq7
 

சிங்கம் 3 - A Tamil Twitter part 1


வேதாளம் @iVedhaLam


8th July 2013 from TwitLonger

சிங்கம் 3 - A Tamil Twitter

எதோ ஒரு அமைதியான கிராமம் பேரு இன்ஸ்டாகிராமமாம். அங்க பூ பழம் செடின்னு போட்டா புடிச்சு போட்டு லைக் வாங்கிட்டு அமைதியா இருக்காரு சார் நம்ம துரைசிங்கம் ரகுபதி ராசா (@raguc). அப்பப்ப பெசண்ட் நகர் பீச்ல திருட்டுத்தனமா நடக்குற ட்வீட்டப்லாம் போட்டா எடுத்து டீட்டெய்ல்ஸ் கலெக்ட் பண்றாரு சார். இவுரு யாருன்னு வியூவர்ஸ்க்கே டவுட்டு வருது. அப்ப நாம சொல்றோம். ரகுபதி ஒரு பிரபல ட்விட்டர். அக்கவுண்ட் டீ-ஆக்டிவேட் பண்ணிட்டு இப்ப அமைதி விரும்பியா இன்ஸ்டால இருக்காருன்னு. கனலோட ஃபேக் ஐடி ஒண்ணு இன்ஸ்டால போய் “நான் உங்கள லவ் பண்றேன்”னு சொல்ல “உனக்கு வயசிருக்கு. எனக்கு லட்சியம் இருக்கு”ன்னு அட்வைஸ் பண்றாரு. அவ்ளோ நல்லவராம்.

ஒருநாள் பிரபல ட்விட்டர் பஞ்சாயத்து (@thirumarant) கிட்டேர்ந்து ரகுசிக்கு போன் வருது. அப்ப அவர் சொல்றாரு. ரெண்டு பிரபல ட்விட்டருங்க கட்டதொர (@kattathora) & (@thirutukumaran) ரெண்டு பேருதான் ட்விட்டர்ல டான்’னும். ரெண்டு பேரும் எதிரின்னும், கட்ட கடலை போட்டா திகுவுக்கு புடிக்காதுன்னும், திகுவுக்கு நீலிமா ரிப்ளை பண்ணா கட்ட டென்ஷன் ஆகுறார்ன்னும் ஏதோ ரகசியம் இருக்கிறதாவும், டீட்டெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டு கால் பண்றேன்னும் சொல்லிட்டு போன வைக்கிறார்.

மறுபடி ஒருநாள் மெரினால ஒரு ரகசிய ட்வீட்டப் நடக்குது. அத மறைமுகமா நின்னு கவனிக்கிற ரகுசி டென்ஷனாகுறார் சார். உடனே பஞ்சாயத்துக்கு போன் போடுறார். “சார் நாம நடக்குற மாதிரி ட்விட்டர்ல நடக்குறது கடலையோ, வேற எதுவோ இல்ல சார். நம்ம மக்கள்க்கு இங்கிலீஸ் அறிவு போதலைன்னு ஒரு தாழ்வு மனப்பான்மைய கிரியேட் பண்ணி எல்லாரையும் இங்கிலீஸ் ட்விட்டர் ஆக்க சதி நடக்குது சார். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். இப்படியே போனா தமிழ்-ட்விட்டர்ன்னு ஒரு சமூகமே இல்லாம போயிடும்”ன்னு ஃபீல் பண்றார் .

சொல்லிவெச்சா மாதிரியே அடுத்தநாள் ட்விட்டர்ல ராஜா-ரகுமான் சண்டை வந்து கலவர பூமி ஆக எல்லாரும் அக்கவுண்ட் டீ ஆக்டிவேட் பண்ண ஆரம்பிக்குறாங்க. அப்ப ரகுசி பஞ்சாயத்துக்கு போன் பண்றார். ”சார் இப்ப இங்க நிலைமை கட்டுக்கடங்காம போயிகிட்டிருக்கு. உடனே நான் சார்ஜ் எடுத்துக்கிறேன்”ன்னு மறுபடியும் பிரபல ட்விட்டர் @RaguC யா லாகின் பண்றாரு. அப்ப அங்க சண்டைல முக்கிய புள்ளிகள் எல்லாரையும் ப்ளாக் பண்றாரு. தெரியாத்தனமா ஏதோ ஒரு இங்கிலீஸ் ஐடியையும் சேர்த்தே ப்ளாக் பண்ணிடுறாரு. அது யாரா இருக்கும்ன்னு யோசிச்சுகிட்டே இருக்கும்போது...

<இடைவேளை>

பார்ட்-டூ எழுதலாமா?
http://tl.gd/n_1rl7v69
 

Friday, July 5, 2013

தாம்ப்ராஸ்


kavirajan @kavi_rt


4th July 2013 from TwitLonger 

அனைத்து சமுதாயப்பேரவையில் தாம்ப்ராஸ்

பார்ப்பனரல்லாத பிற ஜாதிக்காரர்கள் அவரவர்களுக்கான அமைப்புகளிடம் வைத்திருக்கும் உறவைக்காட்டிலும் சாராசரி பார்ப்பனர்கள் பார்ப்பனசங்கத்திடம் வைத்திருக்கமாட்டார்கள் என்பதே ஒரு மோசமான சிந்தனை என்று நினைக்கிறேன். பொதுவாகவே தமிழகத்தில் எந்த ஜாதியைச்சார்ந்தவர்களும் அப்படி செயல்படுவதில்லை. கழகங்களின் ஆட்சியில் பொதுத்தளத்தில் தங்களுக்கான பிரதிநித்துவம் கிடைப்பது பற்றிய அறிவு அவர்களுக்குண்டு. அதனுள்ளாக தீவிர ஜாதி உணர்வோடு இயங்கும் சிலர் எப்போதும் இருந்துவந்திருக்கிறார்கள். வேண்டுமானால் இப்படிச்சொல்லலாம் சராசரி பார்ப்பனர்கள் அவர்களுக்கான சங்கத்தையும் கூட மிக ஜாக்கிரதையாக பயன்படுத்துவார்கள் இதன் அர்த்தம் ஜாதி உணர்வு இல்லை என்பது கிடையாது இது மற்ற ஜாதிகளுக்கும் அதேயளவு பொருந்தும்.

லௌகீக அடிப்படையில் யோசித்தால் அதற்கான தேவையும் அவர்களுக்கில்லை (இவ்விடத்தில் பெரியாரின் வைதீக / லௌகீக ஒப்புமை நினைவுகூறத்தக்கது) எதற்காக படிநிலையில் முதலிடத்தில் இருப்பவர்கள் அதைத்துறந்து சிக்கலில் மாட்டிக்கொள்ளவேண்டும்? மறைந்த டோண்டுவின் பாணியில் சொல்வதாக இருந்தால் “நீங்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் பார்ப்பன அடையாளத்தை உங்கள் மீது சுமத்தப்போகிறார்கள் பிறகு ஏன் தேவையில்லாத தொந்தரவு?” இதை தானறிந்த பார்ப்பனராகப்பிறந்த ஆனால் முற்போக்கு சிந்தனையுடைய பலரிடம் அவர் வேண்டுகோளாகவே முன்வைத்திருக்கிறார்.

இன்றைய சூழலில் இது ஒரு முக்கியமான பிரச்சனை இல்லை என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் பாமக சித்திரை முழுநிலவு நாளில் கூட்டிய தலித்துகளல்லாத அனைத்து சமுதாயப்பேரவை என்ற அமைப்பில் தாம்ப்ராஸ் கலந்துகொண்டதை ஒன்றுமில்லாத விஷயமாக்க சிலர் முயல்வதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு முன்பு நடந்த சித்திரை விழாவில் கைபர், போலன் கணவாய் வழியாக ஆடுமாடுகளை ஓட்டி வந்தவர்கள் ஆண்ட பரம்பரையான எங்களிடம் வேலை செய்தவர்கள் என்று ஆரம்பித்து காடுவெட்டி குரு பார்ப்பனர்களை வசைமாறிப் பொழிந்த பேச்சுகள் இன்னும் இணையதளங்களில் காணக்கிடைக்கிறது பாமக’வை அறிந்த யாருக்கும் இது புதிதான செய்தியுமல்ல. ஆனால் இதையும் மீறி தாம்ப்ராஸ் ஏன் மருத்துவர் ஐயாவை வானளாவ புகழ வேண்டும்? பாமக ஏன் பார்ப்பனர்களுக்கு பிரச்சனை என்றால் நாங்கள் முன்னிற்போம் என்று சூளுரைக்கவேண்டும்? சிந்திப்பவர்களுக்கு இந்தக் கேள்விகளுக்கான விடை தெரியும். சமாளிப்பவர்களுக்கு வழக்கம்போலவே இருக்கிறது திராவிட இயக்கங்களின் மீது பழி போடும் உத்தி.
http://tl.gd/n_1rl664j

Wednesday, July 3, 2013

ட்விட்டர் பட்ஜெட் 2013-14


சேந்தன் அமுதன் @Sakthivel_twitt


4th July 2013 from TwitLonger 

ட்விட்டர் பட்ஜெட் 2013-14

என்னடா பட்ஜெட் மார்ச்-ஏப்ரல்ல தானா வரும். இப்ப வருதேன்னு பாக்குறீங்களா?? மார்ச்-ஏப்ரல்ல நிறைய பேர் பரீட்சைன்னு காலேஜ் பசங்க,வாத்தி,ஸ்கூல் போற பசங்களோட அப்பா,அம்மா இப்படி யாரும் ட்விட்டர்க்கு சரியா வர்றதில்ல... அதான், பள்ளிக்கூடம்,காலேஜ் திறந்த பிறகு பட்ஜெட்... அப்படியெல்லாம் சொல்லுவேன்னு நினைக்காதீங்க... நான் இப்ப தான் வெட்டியா இருக்கேன். அதோட,இப்ப தான் இது எனக்கு தோனுச்சு..

அரட்டைகேர்ள் ஐடிய கிட்டதட்ட 10000 பேர் ஃபாலோ பண்றாங்க. அதுல இருந்து ஒரு 7000-8000 கூட்டிக்குவோம். ஏன்னா 7,8 எனக்கு ராசியான நம்பர்ன்னு எங்க தெரு முக்குல இருக்குற ஜோசியன் சொன்னான். ஆக மொத்தம், 18000 தமிழ் ட்வீப்ஸ் இருக்காங்க.

மொத்தம் தமிழ் கீச்சர்கள் - 18000
யூஸ் பண்ணாம வெட்டியா இருக்குற ஐடி - 4000
ஃபேக் ஐடி - 8000
கனலோட ஃபேக் ஐடி(யூஸ் பண்ணுறது மட்டும்) - 500
ஃபேன் கிளப் ஐடிக்கள் - 100
-------------------------------------------------------------------------------
மொத்தம் இருக்குற ஒரிஜினல் ஐடி - 5400

5 இன் தி மைண்ட், 4 இன் தி ஃபிங்கர்ன்னு கூட்டினா 5400 தான் அக்மார்க் முத்திரை குத்திய சுத்த தமிழ் கீச்சர்கள்...

இது வரை பார்த்தது கணக்கு வழக்கு. இனி பாக்க போறது புள்ளி விவரம். புள்ளி என்பது பொதுவாக வட்ட வடிவமாக இருக்கும்.. கோலத்திலும்,கணக்கு நோட்டிலும் அதிகமாக காணப்படும். பாத்தீங்களா.. புள்ளியை பத்தி இவ்வளவு விவரமா யாராவது பேசி பாத்து இருக்கீங்களா?? அவ்வ் :-))

புள்ளி விவரம்:

* பல பிரபல(?) கீச்சர்கள் ஃபேஸ் புக்கில் நடக்கும் சண்டைகளை வேடிக்கை(ஆமாங்க,நம்ம ஆளுகளுக்கு ட்விட்டர் வெளிய சண்டை எல்லாம் போடத் தெரியாதுல) பாக்க போவதால், ஃபேஸ் புக்குக்கு நிகரான ட்விட்டரின் மதிப்பு இந்த வருடம் சரிந்து உள்ளது.
* மேலும்,கொடூரமான போட்டோக்களை இன்னும் கொடூரமாக காட்டும் இன்ஸ்டாகிராம் வந்ததால், இன்ஸ்டாக்ராம்க்கு நிகரான 'டிவிட்பிக்'கின் மதிப்பு சரிந்து உள்ளது.
*ட்விட்டரின் தமிழ் ஜி‌டி‌பி மொத்தமாக 8% மட்டுமே அதிகரித்து உள்ளது. இது சென்ற ஆண்டை விட மிகக் குறைவு ஆகும்.
*மொத்தமாக ட்விட்டர்க்கு புது வரவுகள் குறைந்து,பழைய உறவுகள் பிரிந்து... இது ஒரு வீணாப் போன வருடமாக உள்ளது.
* தூங்காமல் 24 மணி நேரமும் ராக்கோழியாய் இருந்து டிவிட்டும் ராஸ்கொலு போன்ற கீச்சர்களும் தூக்கம் மற்றும் பிற வேலைகளினால் ட்விட்டர் வராமல் இருப்பதால், ட்விட்டர் அடிமைகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது..
* நான் மெயின்டய்ன் பண்ற அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர்ல என் லீவு லிஸ்டே அதிகமா இருக்கு..இதுல நான் எங்க வேதம் ஓதுறது... :-))

இது போன்ற வரவு,செலவு கணக்கை பாத்துட்டு ஜாக்கு கனலையும்,என்னையும் கூப்பிட்டு பயங்கரமா திட்டி,இதுக்கு எல்லாம் காரணம் கேட்டான். அவனுக்கு விளக்கம் சொல்லியே ஓஞ்சு போயிட்டோம். அதில் சில கீழே....

ஃபேஸ் புக் மேல் ஏன் புது மோகம் என்றால்...இங்க இப்ப எல்லாம் சண்டை வறட்சி அதிகமா ஆயிடிச்சு...அதான் அங்க போய் வேடிக்கை பாத்துட்டு வந்து,அதை வச்சி இங்க சண்டை போடுறாங்க. அங்கயே சண்டைப் போட்டா நம்ம ஆளுக டவுசர் கிழிஞ்சு போயிடும்ன்னு விளக்கம் சொன்னோம். அதோட, அங்க ஊரா வீட்டு நெய்ய என் பொண்டாட்டி கையேன்னு லைக் போடுறாங்கன்னு சொன்னோம்.

இன்ஸ்டாக்ராம்ல என்ன தான் போட்டோ போட்டாலும்,அதுக்கு லைக் கேட்டு இங்க தான் நாக்கை தொங்கப் போட்டுட்டு வரணும்ன்னு உண்மையை சொல்லி சமாளிச்சோம்.அப்புறம் கேட்டான் பாரு ஜாக் ஒரு கேள்வி, அது யாரு தூக்கம்? அவன் எந்த கம்பெனி? அவன் வந்தா ஏன் யாரும் ட்விட்டர் வரமாட்டேங்குறாங்கன்னு கேட்டு தூக்கம் விக்குற கம்பெனிய விலைக்கு வாங்க கிளம்பிட்டான். அப்புறம், மெடுலா ஒப்லங்கேட்டால ஓங்கி அடிச்சு, தூக்கம் எல்லாம் மனுசனுக்கு முக்கியம்ன்னு சொல்லி அவனுக்கு 2 தூக்க மாத்திரை கொடுக்க வேண்டியதா போச்சு... ஸப்ப்ப்பா...
நீயா,நானா வுல நம்ம ஆளுக போய் பேசிட்டு வந்த பிறகு,நிறைய புது கீச்சர்கள் வந்தாங்கன்னு சமாளிச்சோம்.(பின்ன,நம்ம நீயா,நானா பிரபலங்கள் பொலம்பின பொலம்பலுக்கே ஆள் சேர்ந்தாங்களா இல்லையா? அவ்வ் :-)) )

இனிமே,தமிழ் கீச்சு உலகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல சில நலத் திட்டங்கள் கீழே...

* கனலுக்கு வொர்க் லோட் குறைக்க, புதுசா "கனல் ஸ்கூல் ஆஃப் ஃபேக் ஐடி'ஸ்" ஆரம்பிச்சு, துடிப்பான 50 புது கீச்சர்களுக்கு ஃபேக் ஐடியாக வாழ்வது எப்படின்னு விலையில்லா பயிற்சி கொடுக்கனும். அவங்க யார் மேலும் தனி மனித தாக்குதல் நடத்தக் கூடாது. எல்லார் கீச்சும் ஆர்டி ஆகணும்,ஃபேவ் பண்ணனும். அது தான் அவங்க வேலை.

* அந்த திட்டத்துக்காக புதுசா 500 ஃபேக் ஐடி கனல் தலைமையில் உருவாக்கப்படும். தனியாக ஒரு புது சர்வர் இதுக்காக ஒதுக்கப்படும். இது மூலமா,யாரும் இனிமே ஆர்டி ஆகல,ஃபேவ் ஆகலைன்னு பொலம்பமாட்டாங்க...

*கவிதை பிளீஸ்,ஃபிகர் பிளீஸ்,4 வரிநோட் மாதிரி தினமும் எதையாவது வச்சி பொழப்பு ஒட்டும் நலிந்த கலைஞர்களை பாராட்டி பரிசு வழங்குறதா சொல்லணும்(கொடுத்துறக்கூடாது).ஏன்னா,எந்த டாபிக்கும் இல்லாதப்ப அவங்க தான் பொழுது ஒட்டும் தெய்வங்கள். தயிர்சாத ஊறுகாய் போல... அது போக பழைய ப்ரோக்ராம் KDQ,தினம் ஒரு தமிழ்ச் சொல் இதெல்லாம் கூட திரும்ப கொண்டு வந்தா நல்லா டைம் பாஸ் ஆகும்.

* தனித்தனியா பொழுது போகலைன்னு பொலம்புற புதுக் கீச்சர் எல்லாரையும் அப்பப்ப ஒரு டிரைன்ல ஏத்தி ஊர் சுத்தி காமிக்கணும். அவங்களுக்கு, என்னோட புது ட்விட்டர் கைட் கொடுத்து இங்கயே அடிமை ஆக்கிடனும்...

* சண்டைக்கு ரொம்ப நாளா பழைய டாபிக் தான் ஓடிக்கிட்டு இருக்கு, புதுசு புதுசா சண்டைக்கு டாபிக் கொண்டு வர்றவங்களை பாராட்டி ஆர்‌டி,ஃபேவ் நிறைய விலையில்லாம கொடுக்கணும். சண்டை ஆரம்பிக்கும் போது 2 சைட்டும் ஏத்தி விட தனியா ஒரு இலாகாவும், சண்டை உக்கிரமாகும் போது பஞ்சாயத்து பண்ண புது இலாகாவும் தொடங்குறோம்.

* பாரதி,ஆதிரா,மதிவதனி மாதிரி ஆர்டி மட்டுமே ஐடிகளை நல்லா பாராட்டி ஊக்குவிச்சு அவங்களை 24 மணி நேரமும் ஆர்டி பண்ண வைக்கணும்.

* ரைட்டர் 1/n போடவும்,ஆச்சி(அனு) ஸ்மைலி போடவும் தனியாக புது சர்வர் வாங்கப்படும்.

* ப்ரியா நவ் ஐடியை மெயின்டய்ன் பண்ணும் அந்த 4 பேருக்கும் இந்த வருடத்திற்க்கான அசுகோன்(ASUKON) விருது வழங்கப்படுகிறது.

* புயிப்பம்,நான்(நோ துப்பிங்) போன்ற குழந்தைகள் விளையாடவும்,சாப்பிட்டு நல்லா வளரவும். புதிதாக, குழந்தைக்களுக்கான தனி சந்து அமைக்கப்படும்.

* நிறைய பேர் மென்சன்க்கு ரிப்ளை பண்றது இல்லைன்னு சொல்றாங்க. எப்பவாவது சந்துக்கு வர்றவங்களை விட்டுறலாம். ஆனா, 24 மணி நேரமும் இங்கயே இருந்துகிட்டு ரிப்ளை போடாம இருக்குறவங்களை,ஒரே நேரத்துல 10 டாபிக் பேசுற 10 புது கீச்சர் இருக்குற டிரைன்ல 3 நாள் சும்மாவே சுத்தவிட்டு தண்டிக்கணும்.

* கன்னா,பின்னான்னு புரியாத இங்குலீஷ்ல மட்டும் பேசுற தமிழ் கீச்சர்க்கு, அழிஞ்சு போன பிராமி,லத்தின்,பாரசீக மொழில பதிலுக்கு மென்சன் போட்டு தமிழ்ல பேச வைக்கணும். அது கூகிள் டிரான்ஸ்லிட்ரேட்டர் யூஸ் பண்ணிக்கலாம்.

* வீட்டில் ஒரு லாரி அழுக்கு இருந்தாலும், தன் சந்து சுத்தமா இருக்கணும்ன்னு மென்சனுக்கு ரிப்ளை போடாமலும், போட்ட மென்சன் அழிப்பவர்களுக்கும்,பேசி வச்சு அவங்களுக்குள்ள மட்டும் ஆர்டி பண்றவங்களுக்கும் 10 நாளுக்கு சந்தை விட்டு ஒதுக்கி வைக்குறோம். யாரும் ஆர்டி செய்யக் கூடாது,மென்சன் போடக் கூடாது.

* தேங்கா மாதிரி அடிக்கடி பிளாக் பண்றவங்களுக்கு, ஒரு வாரத்துக்கு 5 தடவை மட்டும் தான் பிளாக்கு பட்டன் வேலை செய்யும். அதுக்கு மேல,அமுக்குனா அவங்க அக்கவுண்ட்ல இருந்து காசு தான் போகும்... ஆங்.

* புதுசா நிறைய பேருக்கு ஃபேன் கிளப்(Fan Club) ஆரம்பிச்சு இருக்குறதால,ஏற்கனவே ஃபேன் கிளப் வச்சு இருக்கவங்க ஏ‌சி கிளப்(AC Club) கேக்குறாங்க. அது ட்விட்டர் ஜனநாயக ஏற்றத் தாழ்வை உண்டு பண்ணும் என்பதாலும்,ஏ‌சி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பதாலும்,வற்புறுத்தி கேட்பவர்களுக்கு ஒரு அண்டா க்ரீன் டீயை வாயில் புனல் வைத்து ஊற்றும் தண்டனை கொடுக்கப்படும்.

* ஜெமோ,சாரு,மனுஷ் போன்றவர்களை பாராட்டனும். மேலும், இன்னும் தட்டையாகவும்,மொண்ணையாகவும் பேசணும். அப்ப தான், அவங்க வெறுப்புல இன்னும் நிறைய எழுதுவாங்க. அதை வச்சு நாம டைம் பாஸ் பண்ணலாம்.ஆங்.. :-))

* பறவை,ரசனை போன்ற முழு நேர சமையல் ஹஸ்பண்ட்களை பாராட்டி பட்டம் கொடுக்கப்படும். மேலும்,அவர்கள் வெங்காயும் நறுக்கும் போது கூட கண்ணீர் வராத மிஷின் கண்டுபிடிக்க பரிந்துரை செய்யப்படும். இது மூலம், இளைஞர்களுக்கு திருமணம் மீதான பயம் நீங்கும். அவ்வ் :-))

* ட்விட்டரில் சைபர் க்ரைம் போலீசும்,வக்கீலும் இருக்கும்போது, நீதிபதியும்,நீதிமன்றமும் ஏன் இல்லையென கேள்வி எழுப்பபட்டுள்ளது. ஆனால், கட்டதொர போன்றவர்கள் பஞ்சாயத்து திருமாறன் சொம்பை திருடிக் கொண்டு வந்து, இனி நான் தான் நாட்டாமை என்று சொல்லுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது.

* தமிழ் கலாச்சாரப்படி பிடிக்காத ஆளைப் பற்றி, கழிவறையில் தான் திட்டி எழுதுவார்கள். இப்போ,பொது சந்திலேயே வக்கிரமாக திட்டுவதால் கலாச்சாரம் சீர் கெடுகிறது. எனவே, கலாச்சாரத்தை காக்கும் பொருட்டு, கழிவறை சந்து ஒன்று உருவாக்கி அங்கு கழுவி ஊத்த பரிந்துரை செய்யப்படுகிறது..

* குடிகாரர்கள் இனி கீச்சக் கூடாது எனச் சொன்னால், அப்புறம் எல்லாரும் வெறுங்கையை தான் நக்கணும். அதனால, நம்ம நாட்டு வழக்கப்படி குடி கீச்சு போடும்போது, ஒரு டிஸ்கி போடச் சொல்லலாம். அதாவது, "குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு,சைட் டிஷ் உடல் நலத்திற்கு நல்லது"= #KUNKSUNS என்ற பட்டியை(tag) பயன்படுத்த பரிந்துரை செய்யபடுகிறது. அவ்வ்

இன்னும் நிறைய திட்டங்கள் இருந்தாலும், எல்லாத்தையும் இந்த வருசமே சொல்லிட்டா அடுத்த வருசத்துக்கு விட்டத்தை தான் பாக்கணும் என்பதால், இத்துடன் இந்த பட்ஜெட் அறிக்கையை முடித்துக் கொள்கிறேன்.


டிஸ்கி: இது யாரையும் புண்படுத்தும் பொருட்டு எழுதவில்லை, மீறி புண்பட்டு இருந்தால், நான் டம்மி பீசு என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு, புண்பட்ட இடத்தில் நியோஸ்பரின்(neosporin) போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போகவும். இல்லை, கோவப்படுவேன் என்றாலோ, பட்ஜெட் சரி இல்லை எனப் புகார் சொன்னலோ, எனது அடுத்த டிவிட்லாங்கர்க்கு உங்கள் மனதை திடப்படுத்தி கொள்ளவும். அவ்வ் :-))
http://tl.gd/n_1rl5sa0

Tuesday, July 2, 2013

சுப்புலெட்சுமி

  1. சிறியவா எல்லாம் பெரியவாளா ஆக்கி, அவங்க கதையெல்லாம் இவர் பேசி... ப்ச்!!!
  2. ம்ம். இந்தக் கொடுமைய எல்லாம் ஒருமுறைக்கு மேல பாக்கவைக்கிறதிருக்கே.
  3. வாட் மேட்டர்?
  4. ஓ! இதையெல்லாம் பார்க்கக்கூடாதுன்னு ஒரு முடிவு.
  5. இது நானும் பார்த்தது தான்.அப்பவே பேசிக்கிட்டோம்இது ஆவறதில்லைன்னு.அண்ணனை எறக்கி விட்ருவோம்

Image will appear as a link