Tuesday, October 29, 2013

ரைட்டர் ஆறுமுகம்

senthazalravi @senthazalravi


29th October 2013 from TwitLonger
சைபர் கிரைமில் சாரு நிவேதிதாத்தா !
------------------------------------------------------------------


சாரு நிவேதித்தாத்தாவும், அடத்தூவும், அடத்தூவின் ஆடி காரில் ஆடி ஆடி எழும்பூர் சைபர் கிரைம் அலுவலகம் வாசலில் இறங்கும்போது மணி காலை பத்து ! நாஷ்டா முடித்துவிட்டு வந்த இன்ஸ்பெக்டர் அன்பரசனுக்காக ஐந்து நிமிடம் வெயிட்டீஸில் - அங்கே இடது பக்கம் போட்டிருக்கும் மர பெஞ்சில் குத்தவைக்கிறார்கள் !

அடத்தூ : சாரு, சொன்னதெல்லாம் கரெக்டா நியாபகம் இருக்கில்ல ?

சாரு : அதை எப்படி மறப்பேன் ? நான் ஜென் குருடா !! காலையில் குடிச்ச அர்க்கும், ஜக்கி சாமியார் வேப்ப்பிலை உருண்டையும் இன்னும் நியாபகம் இருக்கு !

அடத்தூ : தலைவரே, நாம இங்க வந்திருக்கிறது வட்டத்தை பற்றி கம்ளெயிண்ட் கொடுங்க. அவனுங்களை முட்டிக்கு முட்டி நல்லா நாலு தட்டு தட்டி இங்க உட்கார வைக்கனும்...

சாரு : முட்டீன்னவுடனே ஒன்னு நியாபகம் வருது...

அடத்தூ : யோவ் பொத்து, இது சைபர் க்ரைம் ஆபீஸ், கம்ளெயிண்ட் கொடுக்க வந்துட்டு என்னைய உள்ளாற உக்கார வெச்சுடாத !!

உதவி ஆய்வாளர் சத்யப்ரியா மேடம் உள்ளே வருகிறார் !! டக்கென எழுந்து இரண்டு கைகளையும் நாமக்கல் கோழி போல நீட்டி வழியை மறிக்கிறார் சாரு...

சாரு : மேடம், ஐயாம் சாரு நிவேதிதாத்தா. தமிழ்ச்சூழலில் அதிகம் கொண்டாடப்படாதா, ஆனால் ஓரான் பாமுக் அளவுக்கு கொண்டாடப்படவேண்டிய எழுத்தாளர்.

சத்யப்ரியா : யார் சார் நீங்க ? எனக்கு நிறைய வொர்க் இருக்கு. வேலை நேரத்துல தொந்தரவு பண்ணாதீங்க.

அடத்தூ : மேடம் நீங்க எக்ஸைலை படிச்சதில்லையா ?

சத்யப்ரியா : எக்ஸஸைஸ் பண்ணியிருக்கேன். யார் நீ, இந்த ஆள் கூட வந்தவனா ? இந்த கிழவனை நகரச்சொல்றியா இல்லை தூக்கி போட்டு மிதிக்கவா ? உள்ள ரைட்டர் சார் இருப்பார் அவர்க்கிட்ட போங்க...இப்ப உடனே வழி விடுங்க...

இரண்டு பேரும் டாமிடம் மாட்டிய ஜெரி மாதிரி பம்மி வழிவிடுகிறார்கள் !!!

இன்ஸ்பெக்டர் அன்பரசன் உள்ளே நுழைகிறார். கொஞ்சம் இலக்கிய ஆர்வம் கொண்டவர், உயிர்மை வாசகர், மாஸ்டர் டிரிகி முடித்தவர், தமிழ்ச்சூழலில் நடக்கும் இலக்கியச்சண்டைகள் பற்றி ரொம்பவே தெரிந்துவைத்திருப்பவர் !!!

அடத்தூ : சார், இளங்கோன்னு இன்ஸ்பெக்டர் இருப்பார்னு சொன்னாங்க. அது நீங்களா சார், இண்டர்நெட் ட்ரோலிங் பத்தி ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கனும் !

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : அதுக்கு நீங்க சிபிசிஐடிக்கு தான் போகனும். அவர் ட்ரான்ஸ்பர் ஆகி ஒரு வருசம் ஆச்சே !! அவரை தெரியும் இவரை தெரியும்னு டுபாக்கூர் அடிக்காம பிரச்சனை என்னன்னு சொல்லுங்க...உங்களை எல்லாம் எனக்கு "நல்லா" தெரியும் !!

பேசிக்கொண்டே இன்ஸ்பெக்டர் அன்பரசனின் சீட்டுக்கு போகிறார்கள் !!

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : டீ சாப்பிடுறீங்களா ?

சாரு : இல்லை வேண்டாம் சார், டீன்னா சீலே தேயிலை மட்டும் தான் நான் குடிக்கிறது. இண்டியன் / அஸ்ஸாம் / காஷ்மீர் எனக்கு பல் சுளுக்கிக்கும்...

[இன்ஸ்பெக்டர் மனதுக்குள் - "க்கும். இந்த ஈரவெங்காயத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல]

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : ம் சொல்லுங்க சார், என்ன செய்யனும் ?

சாரு : சார், இணையத்துல என்னைய கிண்டல் பண்றாங்க சார். அவனுங்களை கூட்டிட்டு வந்து முட்டிக்கு முட்டி தட்டனும் சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : என்ன பண்றாங்கன்னு தெளிவா சொல்லுங்க...சும்மா கிண்டல் பண்றாங்கன்னு பொதுவா சொன்னா எப்படி நடவடிக்கை எடுக்கமுடியும் ?

சாரு : சார், சாரு நிவேதிதா வாசகர் வட்டத்துல நான் என்ன எழுதினாலும் அதுக்கு பதிலுக்கு பதில் எழுதுறாங்க சார் !

அடத்தூ : ஆமாம் சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : எங்க எழுதுறாங்க ?

சாரு : சாரு நிவேதிதா விமர்சர்கர் வட்டதுல...கும்மிடிப்பூண்டியில குத்த வெச்சி கும்மியடிசீங்கன்னு நான் வாசகர் வட்டத்துல எழுதுனா, குத்தாலத்துல குனிய வெச்சு குண்டியடிச்சீங்கன்னு விமர்சகர் வட்டத்துல ஆபாசமா எழுதுறாங்க சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : ஒன்னும் பெருசா ஆபாசமா தெரியலையே ? இதுல என்ன சார் பிரச்சனை ? ஜாலியா எடுத்துக்கிட்டு போங்களேன் !! நெகட்டிவ் பப்ளிசிட்டி தானே ? இன்னும் ரெண்டு மூனு எச்சில் புக் வித்துட்டு போகுது !

அடத்தூ : சார், அது எக்ஸைல்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : தெரிஞ்சு தான் சொன்னேன். அல்லக்கை, நீ அடங்கு !

சாரு : [இடைமறித்து], எனக்கு யாரும் பணம் அனுப்பவிடாம செய்யுறாங்க சார். என்னோட வாசகர்களுக்கு எல்லாம் வைரஸால பாதிக்கப்பட்ட என்னோட பக்கங்களை வெப் ஆர்க்கைவ்ல இருந்து எடுத்து அனுப்பி என்னைய காறித்துப்ப வெக்குறாங்க சார்.

அடத்தூ : சாருவுக்கு இருந்த இணைய பெண் வாசகர்கள் அத்தனை பேரையும் காலி பண்ணிட்டாங்க சார். நாங்க இப்பல்லாம் வாசகர் வட்ட கூட்டம் போட்டா அது ஓரினச்சேர்க்கையாளர்கள் மாநாடு மாதிரி இருக்குது சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : உங்க அல்லக்கைக்கு பிகருக கூட்டத்துக்கு வராதது தான் பிரச்சனை போலிக்கு...

சாரு : நோ நோ சார், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. ஹீ ஈஸ் ஆல்சோ சைட்டர். ச்சே ரைட்டர். அவரோட முதல் 600 பக்க தலைகாணி இந்த புத்தக கண்காட்சிக்கு வருது...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : சரி இப்ப என்ன தான் பண்ணனும் அதை சொல்லுங்க !

சாரு : அவனுங்க எல்லாரையும் புடிச்சு FIR போட்டு சுட்டு கத்தியால குத்தி கொலை செஞ்சு ஆயுள் தண்டனை கொடுத்து அது முடிஞ்சதும் மரண தண்டனை கொடுக்கனும் சார். ஜப்பான்ல ஹாருகி முகாரம்னு ஒரு ரைட்டர் டீக்கடை வெச்சிருக்கார் சார், அவரோட ஹிக்கோக்கி முக்காவு அப்படீன்ற சிறுகதைய ஆயா வெச்ச பாயான்னு முப்பது வருசத்துக்கு முன்னால மொழிபெயர்த்தேன். அதுல வரும் தண்டனைகள் அத்தனையும் கொடுக்கனும் சார்...

ரைட்டர் ஆறுமுகம் சில பைல்களோடு உள்ளே வருகிறார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : வாங்க ஆறுமுகம்...

சாரு : [இருக்கையில் இருந்து எழுந்து] - ஹாய் ஆறுமுகம். ஐயாம் சாரு நிவேதிதா...தமிழ்ச்சூழலின் ஜென் குரு. உத்தம தமிழ் எழுத்தாளருக்கு முன், ரஜினிக்கு முன், இமயமலை தொட்ட ஒரே தமிழ் எழுத்தாளர், ஐ லவ் கனிமொழி...ஜாக்கி ஜட்டி எனக்கு சுடர்மணி..முன்னாள் நித்தி இன்னாள் ஜக்கி...

ரைட்டர் ஆறுமுகம் : [மனதுக்குள் : போடா பக்கி]. யார் சார் இது, சூரியன் படத்து கவுண்டமணி மாதிரி...

அடத்தூ : ஹி ஹி ஹி

சாரு : [மனதுக்குள் : என்னைய மதிக்காத இந்த ஆறுமுகம் அடிக்கிற ஜோக்கும் இவனுக்கு சிரிப்பா இருக்கு. இவன் மட்டும் ஐசிஐசிஐ அக்கவுண்ட்ல என்னைய பேயீயா க்ரியேட் பண்ணலைன்னா என்னைக்கோ கழட்டி விட்டுருக்கலாம்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : சொல்லுங்க சார், எத்தனை பேர் மேல கேஸ் போடனும் ?

சாரு : அது ஒரு 3800 பேர் கொண்ட கும்பல் சார். அத்தனை பேர் மேலயும் போடனும்.

இன்ஸ்பெக்டர் மற்றும் ரைட்டர் ஜெர்க் ஆகிறார்கள். இன்ஸ்பெக்டர் இருக்கையில் இருந்து எழுந்துவிடுகிறார்...

அடத்தூ : சாரு, என்னோட ரெண்டு FAKE ஐடிய எப்.ஐ.ஆர்ல இருந்து நீக்கி சொல்லிடுங்க...

No comments:

Post a Comment