Thursday, May 16, 2013

டான் டான் டான் krajesh4u 16th May 2013 from TwitLonger

இந்த சமூகம் விசித்திரம் நிறைந்த பல ட்விட்லாங்கர்களைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இந்த ட்விட்லாங்கர் விசித்திரமல்ல, இதை எழுதிய நானும் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ரெண்டுகால் ஜீவன்தான்.
ட்விட்டரிலே குழப்பம் விளைவித்தேன்.

பல பாளோயர்களை தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. ட்விட்டரிலே குழப்பம் விளைவித்தேன். ட்விட்டர் கூடாது என்பதற்காக அல்ல. ட்விட்டர் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பல பாலோயர்களை தாக்கினேன். அவன் பாளோயர் என்பதற்காக அல்ல. பாலோயிங் ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை கண்டிப்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக ஆம்லேட்டுகளை சாப்பிட்டு கூமுட்டைகளை காலி பண்ணுகிறானே பரோட்டா மாஸ்டர் – அவனைப் போல.
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள மீன்பாடி வண்டி எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும்.

பாட்டொலிக்கும் பாடகிகள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் ஸ்கிரீன்ஷாட் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் டீக்கடைகளை தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான்.

பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? தமிழ்நாடு! அது என் வயிரை வளர்த்தது. என்னை அகலவனாக ஆக்கியது. பிரபல டிவிட்டர் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி 'கனலி', இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பால் டப்பாவை பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

காண வந்த பிரபல தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ 'சொப்பனசுந்தரி'. மங்களகரமான பெயர். ஆனால் சொல்லுவதெல்லாம் புரிகிற மாதிரில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் டிபி. கண்களிலே நீர். சுந்தரி அலைந்தாள். அவளுக்காக நான் அலைந்தேன்.

அவளுக்கு கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். ட்ரோல்லிங் வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கெடுக முயன்றான். அவள் ஃபேக் ஐடியில் உள்ள ஆண் என்பதால் விட்டுவிட்டான்!.

விருப்பமானவர்களைக் ப்ளாக் பண்ணுவது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் டீஆக்டிவேட் பண்ண சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் சொப்பனசுந்தரி. இது எப்படி குற்றமாகும்?

என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், டிவிட்டப்பிலே ஒரு நாள் – மினி டிவிட்டப்பில் ஒருநாள் - மைக்ரோ மினி டிவிட்டப்பில் ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?

ப்ளாக்கிங் என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். அன்ஃபாலோ என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். Report as Spam என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் ட்விட்டரின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று ட்விட்லாங்கரை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் சொப்பன சுந்தரியை?
அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.
குணசேகரன்: யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? சொப்பன சுந்தரி டீஆக்டிவேட் செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம். நான் கனலை ப்ளாக்கியது ஒரு குற்றம்.

இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? சொப்பன சுந்தரியை கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் ஃபேக் ஐடிகளை ட்விட்டரில் நடமாட விட்டது யார் குற்றம்? ஜாக்கின் குற்றமா? அல்லது ஜாக்கின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா?

இக்குற்றங்கள் களையப்படும் வரை ட்விட்லாங்கர்களும் சொப்பனசுந்தரிகளும் குறையப்போவதில்லை.

வாழ்க தமிழ் ட்விட்டர்,
வளர்க கமல் டாட்டர்!

வர்ர்ர்ர்ட்ட்ட்டா
http://tl.gd/n_1rkammm

No comments:

Post a Comment