Thursday, May 16, 2013

ஆனந்த யாழிசை!! RenugaRain 16th May 2013 from TwitLonger

சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க தொல்லை பிடிக்காமத் தான் முகம் தெரியாத த்விட்டேரில் உலவுகிறோம். இங்கயும் மீட்டிங் அது இதுலாம் சரிப்படாது.
தத்துவம் சொன்னமா, நாலு ஆர்டி பண்ணமா, சொந்த கருத்தையும் சுட்டக் கருத்தையும் கலந்து கிரியெட்டிவிட்டிய வளத்தமா, நாலு பேர ப்ளாக் பண்ணமா, பிரபல த்விடேர்களோட சகஜமா பேசுனமா, மென்சன் பாத்து ரிப்ளை பண்ணமா, ப்ளாக் எழுதுனா விளம்பரம் பண்ணமா, அணில் தலை, ராஜா ரகுமான் சண்டை வேடிக்கை பாத்தமான்னு இருக்கணும்.

அத விட்டுட்டு ட்விட்டப் வந்து, எதுக்காக நம்ம ஒருத்தர் கேலி செய்ய வாய்ப்பளிக்கனும்? எனது நெருங்கிய தோழி ஒருவரை சிலிண்டெர் சிலிண்டெர் என்று கிண்டல் செய்கிறார்கள் மக்களே. பெயர் சொல்லப் போவதில்லை. பிறகு தேவை இல்லாமல் பொரணி வேறு பேசினார்கள். ஆதாரம் உள்ளது மக்களே.
விஜயகாந்த் பேசுவது போல் மக்களே என்று சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? காரணம் உள்ளது மக்களே.

சினிமாக்கு செல்வோம். ஆம். அங்கே எங்களை அறிந்தவர் யாரும் இல்லை. சினிமாக்கு செல்வதைப் போலத் தான் நாங்கள் த்விட்டருக்கு வருகிறோம். ட்விட்டப் வருவது அடுத்தவர் வீட்டிற்கு சென்று டிவி பார்ப்பதைப் போன்றது.. புரிந்ததா நண்பர்களே.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் லக்ஷ்மி சொல்வது போல, நான் சௌக்கியம், நீங்க சௌக்கியமா? என்று கேட்டு விட்டு போயிட்டே இருக்க வேண்டும் மக்களே.

சந்திப்பது, உரையாடுவது எல்லாமே அவரவர் எல்லைகளுக்குட்பட்டது. சமூக ஈடுபாடுள்ள பெண்கள் தன்னைப் பற்றிய பேச்சுக்களில் கவலைப் படாத பெண்கள் கலந்து கொள்ளலாம். அப்படிப் பட்ட தைரிய சாலிகளை இந்த பெண்கள் சமூகம் தலை தாழ்ந்து முன் மாதிரிகளாகப் பார்க்கும்.

நான் சொன்ன அனைத்துமே இந்த "ரேணுகா"வின் கருத்து மட்டுமே. யாருக்காவது புரியவில்லை என்றால் மற்றொரு த்விட்லோங்கேரில் சந்திக்கிறேன்.

நன்றி வணக்கம்
http://tl.gd/n_1rkamo1

No comments:

Post a Comment