Wednesday, May 15, 2013

லாஓசி TwitLonger

அன்று sharanky சின்மயி அம்மாவை பற்றி பேசிய பொழுது, அவரை பொறுத்த வரை அது கலாய்க்க சொன்ன விஷயம், ஆனாலும் அது சின்மயி மனதை புண் படுத்தி இருந்ததால் அவர் மன்னிப்பு கேட்டு இருந்திருக்கலாம்.... சின்மயி அன்று மீண்டும் மீண்டும் சொன்னதும் அதைத்தான்... (அவருடன் அன்று பேசியவன் என்ற முறையில் நான் அறிவேன்... ) இவர் மன்னிப்பு கேட்க மறுத்து மேலும் தவறாக பேசியதால் தான் சின்மயி நான் புகார் அளிப்பேன்.... and all those.. அதை செய்தும் காட்டினார்.

இதில் நான் சொல்ல வருவது.... மற்றவர் தாயை பற்றி பேசியது அவர் மனதை புண் படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற சாதாரண எண்ணம் அன்று தோன்றாததற்கு காரணம் சொம்பு தூக்கிகள்... அவர் என்ன செய்தார் நிலமை என்ன எதையும் அறியாமல் வார்த்தைகளை ஏவி... செய்தது தவறு தானோ என்ற எண்ணத்தை கூட தராதது அன்று கீச்சிய அனைவரும் தான்... அன்று சந்தில் அனைவரும் சேர்ந்து தவறு என சொல்லி... மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லி இருந்தால்.... i mean சந்தின், தமிழ் சந்தின் குரலாய் ஒலித்திருந்தால் அவரும் புரிந்து கொண்டிருப்பார்... apologizing is not a sin. அதற்கு பின் ஏற்பட்ட அனைத்தையும் தடுத்திருக்கலாம்.... அல்லது தள்ளி போட்டிருக்கலாம்.... அன்று sharankyக்கு நீ செய்தது தவறே இல்லை என்ற எண்ணத்தை தந்த அந்த அர்த்தத்தில் கீச்சிய எவரும் பிரச்சனையின் பொழுது உடன் இல்லை என்பதை நான் அறிவேன்...

நேற்றும்... பாதிக்க பட்ட mr_idiot எதையுமே சொல்ல வில்லை... he was actually normal... எங்கிருந்து வந்தார்கள் இந்த தக்காளி பாய்ஸ் மற்றும் அவர்களுக்கு சொம்பு தூக்கியவர்கள்???!! இவர்களுக்கு இங்கு அவ்வளவு கொடிய வார்த்தைகள் உபயோகிக்க வேண்டிய அவசியம் என்ன??

பிரதீபா கீச்சை அழித்தது அது தவறு அப்படி சொல்லியிடுக்க கூடாது என்ற புரிதலினால் தானே.... அதன் பிறகும்... ஒன்று கூடி.... வன்மத்தை இறக்கி...
அதை பலரும் RT செய்து.... அவர்கள் உபயோகித்த வார்த்தைகளை பெண்ணுக்கு எதிராக உபயோகித்த வார்த்தைகள் 66A கீழ் வராதா என்ன???
தக்காளி பாய்ஸ் இது போன்ற சொற்களை பொதுவில் உபயோகிப்பது நான் அறிந்து இது இரண்டாவது முறை.... என்றேனும் ஏதேனும் பிரச்சனை வந்தால் இப்பொழுது சொம்பு தூக்கும் எவரும் உடன் இருக்க போவதில்லை....

சக கிச்சர்களே.... எங்கேனும் தவறு நடப்பது... சரி தவறு எதுவென சொல்ல நான் யார்... எங்கேனும் நடப்பது சரி அல்ல என்ற உணர்வு ஏற்பட்டால் அதை பதியுங்கள்... நேற்று நடந்ததை ஆதரித்தவரை விட வெறுத்தவர்கள் தான் அதிகம் எனினும் TLல் அவர்கள் குரல் தானே அதிகம் இருந்தது??


உங்கள் அமைதி எதையுமே சாதிக்க போவதில்லை... கண்டனங்களை பதிவு செய்வது மற்றவர்களுக்கு.. பெண்களுக்கு ஒரு நம்பிக்கை தரலாம்... பிடிக்காததை கண்டால் தூர விலகுவது ஒரு வகை அணுகுமுறை தான் ஆனால் சந்து என்பது பொது அல்லவா??? இங்கு நடக்கும் அனைத்தும் அனைத்திலும் அனைவருக்கும் பங்கு உள்ளது. மௌனம் சம்மதம்.... மௌனமாக நீங்கள் கடக்கும் அனைத்திற்கும் உங்கள் சம்மதத்தை தெரிவிக்கிறீர்கள் என ஆகுமல்லவா???

இணையத்தில் முதலில் பெண்களை தரமாக நடத்துவோம்... பின் டிவிட்டப் பற்றி யோசிக்கலாம்...
http://tl.gd/n_1rka6u8

No comments:

Post a Comment