Thursday, May 16, 2013

சேந்தன் அமுதன் Sakthivel_twitt 16th May 2013 from TwitLonger

கடந்த 2 நாட்களா ட்விட்டரில் நடக்கும் பிரச்சனை அனைவரையும் குழப்பத்தில் விட்டுள்ளது... அது பற்றி நான் என் மனசுக்கு தோனியதை சொல்லிடுறேன்...

அவங்க செய்தது தப்பு தான். அதை நியாயப்படுத்த விரும்பல.. இவங்க செய்தது தப்பு தான்... அதையும் நியாயப்படுத்த விரும்பல.. அவங்க அப்படி சொல்லி இருக்கக்கூடாது... இவங்களும் இப்படி சொல்லி இருக்க கூடாது... சொல்லுறதுக்கு அவங்களுக்கு என்ன உரிமை இருக்கு? இல்ல இவங்களுக்கு தான் என்ன உரிமை இருக்கு? இவங்கள பத்தி அவங்களுக்கு என்ன தெரியும்? அவங்கள பத்தி இவங்களுக்கு என்ன தெரியும்? இது இவங்களோட தனிப்பட்ட விஷயம். அதே மாதிரி அது அவங்களோட தனிப்பட்ட விஷயம். இதுல ஏன் எவங்க எவங்களோ கருத்து சொல்லணும். இவங்களுக்கு அவங்க ஏன் பொதுவுல விளக்கம் கொடுக்கணும்? அவங்க இவங்களுக்கு ஏன் பொதுவுல விளக்கம் கொடுக்கணும். மாறி மாறி பேசி... மாறி மாறி கேள்வி கேட்டு...

எல்லாருக்கும் எல்லாம் தெரியாது. எதுவும் தெரியாமலும் இருக்காது. இப்ப இவங்களும்,அவங்களும் உங்க கருத்தை கேட்டாங்களா? இதெல்லாம் பேச நீங்க யாரு? இதெல்லாம் பேச நான் யாரு? நாம யாரு? #ISNKK

இப்ப என் பிரச்சனை என்னன்னா... எதுக்கோ என் ட்விட்டர் அக்கவுண்ட்க்கு பூட்டு போட்டேன்... ஆனா அதோட காரணம் நிறைய டிவிட்லாங்கர் படிச்சுதுல மறந்து போச்சு... இப்ப என் மனசுக்கிட்ட சண்டை போட்டு பஞ்சாயத்து பண்ணி நிறைய டிவிட்லாங்கர் போட்டா உண்மை காரணம் தெரிஞ்சுடுமா? #டவுட்டு...



http://tl.gd/n_1rkampg

No comments:

Post a Comment